பக்கங்கள்

செவ்வாய், 23 ஏப்ரல், 2013

வெண்ணை திரளும் நேரத்தில்..... தாழியை உடைக்காதீர்கள்......

வெண்ணை திரளும் நேரத்தில்..... 

தாழியை உடைக்காதீர்கள்......



ஒரு நாள் இரவு என் உறவினரை பார்க்க நடந்து சென்று கொண்டிருந்தேன் . அப்போது ஐந்து பேர் என் வாயை பொத்தி மலை பகுதிக்கு தூக்கிச்சென்று கதற காதற’”....... என்று கண்ணீர் வடித்தார் அவர். பாதிக்கப்பட்ட அவர் யார் என்று கேட்க்க தோன்றுகிறதா? இந்த கதறலுக்கு சொந்த காரர் ஒரு ஆண்! ஆச்சர்யமாக இருக்கிறதா...... என்று தொடங்கிகிறது அந்த கட்டுரை 

03/03/2013 அன்று நிருபன் என்று ஆங்கிலத்தில் பெயர் தாங்கி வரும் ஒரு புலனாய்வு வார இதழில் வெளி வந்துள்ள ஓரின சேர்க்கை பற்றிய கட்டுரை தான் இது.

செக்ஸ் வக்கிரம் கொண்ட ஆண்கள் இணைந்து இவ்வாறு பல ஆண்களை கற்பழிக்கும் சம்பவங்கள் சமீப காலமாக அதிகரித்துள்ளதாக இக்கட்டுரை எழுத பட்டிருக்கிறது. முழுக்க முழுக்க கற்பனையும்,களங்கம் கற்பிக்கும் நோக்கத்துடனும் இக்கட்டுரை புனைய பட்டிருக்கிறது.
நான்கு படித்து நாகரீகம் அறிந்த ஓரின சேர்க்கயாலர்களுக்காக எத்தனையோ இனைய தளங்கள் இங்கு கொட்டி கிடக்கின்றன. இனைய வசதிகளை பயன் படுத்த இயலாத எத்தனயோ நபர்கள் பேருந்து நிலையங்களிலும் மக்கள் கூடும் பொது இடங்களிலும் தன் இச்சையை தீர்க்க துணை தேடி கொள்ளுகின்றனர். இதுதான் நடைமுறையில் நடக்கிறது. அப்படி இருக்கையில் ஒரு ஆணை கடத்தி சென்று கற்பழிப்பது போல அனைத்து ஓரின சேர்க்கையாளர்கள் மீட்தும் தவறான எண்ணம் படிய வேண்டும் என்றே இக்கட்டுரை புனைய பட்டு உள்ளது.
மேலும் இது போன்று பாலியல் தொந்தரவிற்கு ஆளாகும் ஆண்களுக்காவே men rapped supported form  என்ற அமைப்பு ஒரு இனைய தளம் உருவாக்கி இருப்பதாகவும் அதில் இது போன்று எண்ணற்ற பாதிக்க பட்டவர்கள் வாக்குமூலம் அளித்திருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது ஒரு சிலரின் வாக்கு மூலங்களாக சில பத்திகளும் எழுத பட்டுள்ளது.

 நான் கேட்கிறேன் எண்ணற்ற இனைய தளங்களும், அமைப்புகளும் ஓரின சேர்க்கயளர்களுக்காக போராடி வருகிறது அவர்களுக்கு ஆதரவாக கருத்துகளை பதிவு செய்கியது அவையெல்லாம் இந்த வார இதழின் கண்களுக்கு புலப்பட வில்லையா.....?. 
அது போக அந்த நிறுவனத்தின் தலைவரையும், இது போன்ற குற்றங்களுக்கு தண்டனை வழங்க சட்டதில் இடம் இருக்கிறதா என்று ஒரு வழக்கறிங்கரிடமும் பேட்டி கண்டு வெளியிட்டுள்ளது. அவர்கள் இருவரும் இது போன்ற (ஓரின சேர்க்கை) மன்னிக்கமுடியாத குற்றங்களை தடுக்க கடுமையான சட்டங்கள் நிறைவேற்ற பட வேண்டும் என்றும். ஒரு சில நாடுகளில் உள்ள தண்டனைகளை பற்றியும், இந்த பழக்கம் ஒரு மனநோய் என்பது போன்றும் கூறி உள்ளனர் இது வன்மையாக கண்டிக்க பட வேண்டிய ஒரு விஷயமாகும்.

 இந்திய உச்ச நீதி மன்றமே “விருப்பத்துடன் உறவில் ஈடு படும் இருவரின் படுக்கை அறைக்குள் எட்டி பார்ப்பது குற்றம் என்று கூறியுள்ளது”’.
 
 இப்போது என் கேள்வி என்ன வென்றால் ஒரு ஆணை கடத்தி கற்பழிக்கும் வரையில் அந்த ஆண் எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல் இருந்தாரா......? ஓடகூட முயற்சிக்கவில்லையா.? ஒரு ஸ்ட்ரைக்ட் ஆணுக்கு உண்மையில் இப்படி ஒரு சம்பவம் நடந்தால் அவன் உண்மையில் எதிர்த்து சண்டை போடுவானா இல்லை இணையத்தில் வந்து புலம்பி கொண்டிடிருப்பானா....... 

  அதே சமயம் நம்மவர்களில் சிலரும் இது போல நடந்து கொள்ள வாய்ப்புகள் அதிகமாகவே இருக்கிறது. இச்சைக்கு பணியும் எத்தனையோ ஆண்கள் இங்கு அதிகமாகவே இருக்க ஏன் இப்படி விருப்பம் இல்லாதவர்களை அனுபவிக்க துடிக்க வேண்டும். உங்களை போல சிலர் செய்யும் தவறுகளால். ஒரு விடியலை எதிர் நோக்கி இருக்கும் ஒட்டு மொத்த “கே சமுதாயமும் பாதிப்படைகிறது. ஓரின சேர்க்கை ஆதரவு என்ற வெண்ணை திரண்டு வருவதற்கான காலம் கணியகூடிய நேரத்தில் தாழியை உடைத்தார் போல ஆகிவிடும் தங்களை போன்றோரின் செயல்கள் என்பதை மறந்து விடாதிர்கள்

 சமுதாயத்தின் அனைத்து மக்களுக்கும் ஆதரவாக் இருக்க வேண்டிய பத்திரிக்கைகள் இப்படி பொறுப்பின்றி  நடந்து கொள்வதையும் மாற்றி கொள்ள வேண்டும். இன்றைய தேதியில் ஓரினச்சேர்க்கயாளர்கள் சமுதாயத்தில் குறிப்பிட தகுந்த சிறுபான்மையினராக உள்ளனர் என்பதை மறந்து விடக்கூடாது   
               





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அன்பு நண்பர்களே.....

கதைகளை படித்து தங்களது மேலான கருத்துக்களை பதிந்து ஊக்க படுத்துங்கள்... உங்களது விமர்சனம் மற்றும் கருத்துக்களுக்காக காத்திருக்கிறேன்... உங்காளது கருத்துக்களை orinakathal@gmail.com என்ற முகவரிக்கு குறைந்த பச்சம் மின்னஞ்சல் செய்யுங்கள்.. அன்புடன் ராஜ்குட்டி காதலன்..