பக்கங்கள்

திங்கள், 9 மே, 2016

ஆலம்பரை கோட்டை நிறைவுப்பகுதி


முன்குறிப்பு: இந்த பகுதியில் வரும் சம்பவங்கள் பெரும்பாலும் கற்பனையே. அதோடு தமிழகத்தின் வீரவரலாற்றில் நடந்த உண்மை சம்பவமொன்றை கதையின் போக்கில் புனைந்து எழுதியுள்ளேன். வாசகர்கள் விவேகத்துடன் செயல்படுவீர்களாக.



   ஆலம்பரை கோட்டையை சூழ்ந்திருக்கும் ஆங்கிலேயப்படையினர் அனுப்பிய கடிதத்தை தாங்கிவந்த அம்பானது சீறிவந்து மண்தரையில் குத்தி ஆடிக்கொண்டு நின்றது. ஏற்கனவே என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து நின்ற டிசோசாவுக்கும் அவனை சுற்றிநின்ற கோட்டையின் முக்கிய காரியாலோசகர்களுக்கும் அம்பின்வரவு மிகுந்த எதிர்பார்ப்பையும் பீதியையும் கூட்டியிருந்தது.

நாடகமேடையின் பின்புற ஒப்பனை அறையில் இருக்கும் நடிகர்களை எப்போதும் கலகலவென்று இருக்கும் ஆலம்பரை கோட்டைவாசிகளும் அதிகாரிகளின் குடும்பதினரும், வீறுகொண்டு போராடவந்த படைவீரர்களும் உச்சகட்ட பரபரப்பில் இருந்தனர். ஆனால் தமிழகத்தை சேர்ந்த வியாபாரிகளுக்கும் பணியாளர்களுக்கும் அவ்வளவாக ஒன்றும் பீதிஏற்பட்டு விடவில்லை. அவர்களில் பெரும்பாலோனோருக்கு ஆங்கிலேயரின் தற்போதைய நேரடிக்கோபம் பிரெஞ்சுக்காரர்களின் மீதுதானே அன்றி தமிழர்களின் மீதல்ல என்று தெரிந்திருந்தது

இருந்தாலும் போர்நடக்க போகும் இடமல்லவா அவர்களும் ஒருவித உயிர்பயத்தில்தான் இருக்கவேண்டியிருந்தது.
கோட்டையை சேர்ந்த குட்டிபீரங்கிகள் பத்தும் கோட்டையின் மதிலின் மீது ஏற்றபடாமல் அதற்குரிய பாதையில் தயாராக நிறுத்தி வைக்கபட்டிருந்தது. உயரமான கோட்டைமதிலின் மீதிருந்து பீரங்கியால் ஆங்கிலேயர்களை கீழ்நோக்கி தாக்கும் சந்தர்ப்பம் பிரெஞ்சுகாரர்களுக்கு வாய்த்தால் ஆங்கிலேய படையினரை எளிதில் வெல்லும் வாய்ப்பு ஆலம்பரையினருக்கு உண்டு. ஆனால் அதற்கு பீரங்கிகள் இந்நேரம் தயாராக ஏற்றி நிறுத்திவைக்கபட்டிருக்க வேண்டும்.

ஏற்கனவே கோட்டையை சுற்றி ஆங்கிலேயர்கள் சூழ்ந்திருக்க இனி அப்படி ஒரு சந்தர்ப்பம் நிகழுவது சந்தேகம்தான்.
எனில் இந்த பிரெஞ்சுகார மடையர்கள் வெல்லப்போவதுதான் எப்படி என்று அங்கு ஓரமாய் அமர்ந்திருந்த நல்லனும் சாம்பானும் நினைத்துபார்த்து வாய்விட்டு சிரித்துவிட்டனர். அவர்கள் இருவரும் மரக்கானத்திலிருந்து கோட்டையின் லாயத்தில் பணிபுரிபவர்க்கள். ஏற்கனவே என்ன செய்வது என்று அறியாமல் திகைத்து போயிருந்த டிசோசாவுக்கு அந்த சிரிப்பு சத்தம் பேரிடியாய் கேக்கவே அவர்களை அழைத்து வந்து சுரீரென்று முதுகில் சாட்டையால் அடித்து கைகட்டி நிற்க பணித்தான். கைகள் பின்புறம் கட்டபட்ட்டிருப்பதால் அவர்களால் முதுகை தேய்த்து கொள்ளகூட முடியாமல் தரையில் புரண்டு கதறினர்.
அம்பிலிருந்து கடிதம் விடுவிக்கப்பட்டு டிசோசாவிடம் கொடுக்க பட்டிருந்தது. ஆங்கிலத்தில் எழுதியிருந்த அந்த கடிதத்தின் சாராம்சம் என்னவென்றால்.


பிரெஞ்சு கலெக்டர் அவர்களுக்கு ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனியார் எழுதும் கடைசி எச்சரிக்கை கடிதம். ஆலம்பரை கோட்டையை காலிசெய்து கொடுக்க வேண்டும் என்று ஏற்கனவே இருமுறை கடிதம் அனுப்பியும் உங்கள தரப்பில் இருந்து எந்தபதிலும் வராத காரணத்தால் படைபலம் கொண்டு கோட்டையை கைபற்ற எண்ணம் கொண்டுள்ளோம். எனினும் கடைசிவாய்ப்பாக ஒரு சலுகை உண்டு. அதுஎன்னவென்றால் கோட்டையை தற்பொழுதாவது காலிசெய்து அனைத்து பிரெஞ்சுக்காரர்களும் வெளியேறினால் உயிராவது மிஞ்சும். இன்னும் ஒருமணிநேரத்திற்குள் தகுந்த பதில் தரப்படவில்லை என்றால் போருக்கு தாயார் என முடிவெடுத்து கோட்டை தகர்க்கப்படும். என்பதாகும்.
கடிதத்தை படித்த உடன் டிசோசா பிராங்க்ளினை நோக்கி பிரஞ்சு மொழியில் பேசினான்.


ஆங்கிலேயர்களிடம் இருந்து ஒருமுறைதானே கடிதம் வந்தது அதனால் தான் ஆயிரம் படைவீரர்களை காரைகாலிலிருந்து தருவித்துள்ளோம் அவர்கள் இரண்டு முறை என்கிறார்களே இதென்ன புதுக்கதை பிராங்க்ளின்?
பிரான்க்ளினுக்கு ஒன்றும் தலைகால் புரியவில்லை. கடந்த காலத்தை சற்று தூசிதட்டி பார்த்தான் எதோ ஒரு கடிதம் ஒன்று தன் கைக்கு வந்தது போலவும் அதனை பிரித்து படிக்க நினைத்து அறைக்குள் கொண்டு சென்றதும் நினைவுக்கு வந்தது. உண்மையை சொல்வதா வேணாமா என்று அவன் திக்கி தினறியத்தை எண்ணி அவனது கள்ளத்தனத்தை புரிந்து கொண்ட டிசோசா அணிவகுப்பில் நின்றிருந்த செபாஸ்டியனை அழைத்து பிராங்க்ளினின் அறைமுழுவதையும் சோதனை செய்துபார்த்து வரப்பணித்தான்.

இந்த சம்பாசனைகள் எல்லாம் பிரெஞ்சு மொழியிலேயே இருந்ததால் அங்கு ஒரு ஓரமாக அமர்ந்திருக்கும் தமிழர்களுக்கோ அதில் செபாஸ்டியனை கூர்ந்து நோக்கி கொண்டிருக்கும் முருகனுக்கோ நிச்சயம் புரியவில்லை. ஆனால் தன் ஆசைகாதலன் இந்த இக்கட்டிலும் எதோ வேலையாக தனிப்பட்டு பணிக்கபடுகிறான் என்று மட்டும் அவனுக்கு புரிந்தது.
மேலும் இந்த போரைபற்றி மிகுந்த வேதனை கொண்டிருந்தான் நமது முருகன்.

அதில் முதலாவது என்னவென்றால் செபாஸ்டியனுடன் பிரான்ஸ் தேசம் போவது கனவாய் போய்விடுமோ என்பதாகும். அதையும் தாண்டி இன்னொரு கவலை அவனது மனத்தை பிடுங்கி தின்றது. அதுன்னவேன்றால் வீரத்துக்கு பெயர்பெற்ற தமிழனாய் பிறந்து இப்படி அன்னியர் இருவர் அடித்து கொள்ளும் நிலையில் அடிமையாய் அமர்ந்திருக்கிறோமே என்பதே ஆகும். நெஞ்சில் மலையளவு கவலைகள் இருந்தாலும் அனைத்தையும் தூக்கி விழுங்கும் ஆறுதலாக காதல் என்பது இருக்கும் ஆனால் அந்த காதலே கவலைக்கிடமாக இருக்கும் நிலையில் இனஉணர்வு பெரிதாக முன்னேறவில்லை முருகனுக்கு.

அறைக்குள் சென்ற செபாஸ்டியன் எப்பொழுது வருவான் என்று அந்த அறையின் வாசலை எதிர்நோக்கி இருந்தவனுக்கு செபாஸ்டியன் எதோ ஒரு குழலை கொண்டுவந்து டிசோசாவிதம் பணிவுடன் கொடுப்பது தெரிந்தது.
அதனை பிரித்து படித்த டிசோசாவுக்கு கோவத்தில் கண்கள் இரண்டும் தீபிழம்பாய் போகவே பிரான்க்ளினை ஓங்கி ஒரு அரைவிட்டான். காரணம் யாதெனில் பிரெஞ்சுக்கரர்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்து ஒருசில உடன்படிக்கைகளை ஏற்படுத்தி போரை தவிர்க்கும் பொருட்டு  ஆங்கிலேயர்கள் அனுப்பிய கடிதம் அது.
அன்று கடற்கரையில் முருகனை கண்டபிறகு கோட்டையில் செபாஸ்டியனின் உடலில் ஒட்டியிருந்த கடல்மனலையும் பார்த்து குழம்பி இருந்த பிராங்க்ளின் இந்த கடிதத்தை பிரிக்காமலேயே மறந்துபோனக் காரணம் இன்று ஆலம்பரை கோட்டை எமலோகத்தின் வாயிலை எட்டிபார்த்து கொண்டு நிற்கிறது.


கடிதத்தை கசக்கி எறிந்துவிட்டு சிறிதுநேரம் குறுக்கும் நெருக்குமாக நடந்த டிசோசா அங்கு கைகட்டி நிருத்தபட்டிருக்கும் இரண்டு பணியாளர்களில் ஒருவனை அழைத்து கோட்டை மதிலின் மீதேறி ஆங்கிலேயே படையின் நிலை எத்தகையது என்று பார்த்துகூற சொல்லி உத்தரவிட்டான்.
ஏற்கனவே வெறியோடு இருக்கும் ஆங்கிலேயர்கள் கோட்டையின்மேல் தெரியும் முதல் தலைக்கு என்ன பதில் தருகின்றனர் என்று சோதிப்பதே அவனது நோக்கம் என்று அங்கு யாருக்கும் புரியாமல் இல்லை. செபாஸ்டியனுக்கு இந்நோக்கம் புரிந்து மனம் சஞ்சலப்பட்டு போகவே அவன் முன்னோக்கி வந்து தானே மேலே ஏறி படைபலத்தை பார்த்து வருவதாக கூறினான்.

அதனை கேட்ட முருகனுக்கு உயிர்போவது போல இருந்தது. ஆனால் டிசோசா அதற்கு மிகுந்த கடுமையுடன் மறுமொழிக்கூறி செபாஸ்டைனை நிராகரித்து நல்லன் என்பவனை மதிலின் மீது ஏறும்படி உத்தரவிட்டான்.
வேறுவழியின்றி மதிலின் மீது பூனை போன்று தவழ்ந்து சென்று ஒரு மறைப்பில் நின்று பார்த்தான் அவன். ஒருபக்கம் வங்கக்கடல் விரிந்திருக்க மறுபக்கம் ஐயாயிரம் வீரர்கள் துப்பாக்கிகளுடனும் இருபத்தி ஐந்து பீரங்கிகளுடனும் ஐம்பதுக்கும் மேற்பட்ட யானைகளுடனும் என்னதொலையாத குதிரைகளுடனும் ஆங்கிலேய சைன்யம் விரிந்துகிடந்தது.

 பிறகு கோட்டைக்குள் இருக்கும் பிரெஞ்சு சைன்யத்தை ஒப்பிட்டு பார்த்த நல்லனுக்கு மீண்டும் சிரிப்பு பொங்கிக்கொண்டு வந்தது. அதனை மீறி சாட்டை வீச்சில் பிய்ந்து போன முதுகு வேதனை கொடுக்கவே அந்த நொடியில் பிரஞ்சுக்கரர்களை பழி வாங்க நினைத்தவன் ஆயிரகணக்கான ஆட்கள், பத்து பீரங்கிகள், பத்து யானைகள் என்று உரக்க கத்தியபடி உற்சாகமாய் எழுந்து நின்றான் கோட்டையின் வெளிப்புறத்தில் இருந்து சீறிக்கொண்டு வந்த ஆங்கிலேய துப்பாக்கி குண்டு ஒன்று நல்லனின் முதுகை துளைத்து மார்பின் வழியே வெளியேறியது. அவன் மேலிருந்து மடார் என்று தரையில் விழுந்தான்.

அனைவரும் அதிர்ச்சியாக அந்த காட்சியை பார்த்து கொண்டிருக்கும் பொழுதே சாம்பன் எனும் இன்னொருவனை மேலே சென்று நல்லனின் கூற்றை ஊர்ஜித படுத்துமாறு டிசொசா கட்டாய படுத்தினான். வேறுவழியின்றி மரணத்தை நோக்கியபடி கோட்டயின்மீது ஏறினான் அவன். கடல்போன்ற ஆங்கிலேய சைன்யம் அவனை வியப்பில் ஆழ்த்தியது நல்லனின் உள்ளம் ஒருகணத்தில் புரிந்தது அவனுக்கு.

தமிழனின் காலதனை தமிழனே அறிவான் என்பது போல அவனும் சைன்யத்தை குறைவாக மதிப்பளித்து கூறினான். குண்டடிபட்டான் கீழே விழுந்து இறந்தான்.
அவ்வளவுதான் டிசோசாவுக்கு உற்சாகம் பொங்கியது. ஆங்கிலேய சைன்யத்துடன் சண்டையிடுவது என முட்டள்தனமாக முடிவெடுத்தான்.

ஒருகணத்தில் கோட்டை பரபரப்பானது. வீரர்கள் தவழ்ந்த படியே கோட்டையின் மீது ஏறினார்கள். செபாஸ்டியன் குழுவினர் கோட்டையின் உள்தளத்தில் இருந்து பீரங்கிகளை இயக்கும் பொருட்டு வளாகத்தில் நின்றனர். ஒருவேளை கோட்டையின் உள்ளே ஆங்கிலேயர்கள் நுழையும் பொழுது வாள்ப்போர் செய்யும் பொருட்டு பலவீரர்கள் வாட்களுடன் வாசலருகே அணிவகுத்து நின்றனர்.


பிரெஞ்சு பீரங்கியின் குண்டு ஒன்று மிகுந்த சத்தத்துடன் எழுந்து ஆங்கிலேயர்களை நோக்கி சென்று விழுந்து வெடித்தது. கோட்டை மதிலின் மீதிருந்த பிரெஞ்சுக்கரார்கள் சரமாரியாக துப்பாக்கிகளால் சுட்டனர். ஆங்கிலேயர்கள் பதிலுக்கு கொண்டு மழை பொழிந்தனர். ஏறத்தாழ ஒருமணி நேரம் நிகழ்ந்த இந்த துப்பாக்கி சண்டையில் பெரும்பாலான பிரெஞ்சு வீரர்கள் இரத்தகளரியாய் கோட்டைக்கு உள்ளேயும் வெளியேயும் விழுந்தனர். பீரங்கி குண்டுகளும் செபாஸ்டியன குழுவினரால் தொடர்ந்து செலுத்த பட்டு கொண்டிருந்தது.

ஆனால் சாமர்த்தியமான ஆங்கிலேயர்கள் கோட்டைக்கு அதிக சேதம் உண்டாகக்கூடாது என பீரங்கிகளை பயன் படுத்தாமல் பின்வாங்கி கத்திருந்தனர் அதனால் மிகுந்த சேதம் பிரெஞ்சுகாரர்களுக்கு. உயிருக்கு போராடும் வீரர்களை தமிழக பணியாளர்கள் பரபரப்புடன் கவனித்து கொண்டிருந்தனர். அவர்களுக்கு மருந்துகள் வைக்கப்பட்டு கட்டபட்டது. முருகன் இத்துணை அவசரத்திலும் செபாஸ்டியனை கவனிப்பதை மட்டும் விடவில்லை, அவனோ கடமையே கண்ணாக பீரங்கியை செலுத்தி கொண்டிருந்தான்,
மேல்தளத்தில் இருந்த பிரெஞ்சு வீரர்கள் அனைவரும் சுருண்டுவிழுந்தவுடன் சிறிது நேரம் பிரஞ்சுகாரர்கள் இடைவெளி விட்டிருந்தனர் இதனை பயன்படுத்திகொண்ட ஆங்கிலேய படையினர் யானைகளை ஒட்டிவந்து கோட்டை வாசலை மூடியிருந்த பெருங்கதவுகளை முட்டசெய்தனர்.

கோட்டையினுள் பெரிய பெரிய மரத்துண்டங்களை தமிழர்கள் சுமந்து கொண்டு பின்பக்கமாக கதவினை முட்டுகொடுத்து காத்து நின்றனர். மடார் மடார் என்று யானைகள் அந்த கதவுகளை முட்டித்தோற்று போய் பிளிறிக்கொண்டு பின்வாங்கின.
இனி பயனில்லை என்று முடிவெடுத்த ஆங்கிலேயர்கள் மருந்து திணித்து தயாராக நிறுத்தி வைக்க பட்டிருந்த பீரங்கிகளை கொண்டு கோட்டை கதவை தாக்கவே அந்த கதவுகள் தூள்தூளாய் பறந்து போயின. வெளியே தயராய் இருந்த ஆங்கிலேய வீரர்கள் கேடயத்துணையுடன் வெகுவேகமாக வாள்வீச்சு செய்து கொண்டு உள்ளேறினர். ஆங்கிலேய மற்றும் பிரஞ்சு வாட்கள் கலீர் கலீர் என்று அங்கு மோதிக்கொண்டு ஆலம்பரை கோட்டை உள்தரையை இரத்த சகதியாக்கியது.


செபாஸ்டியன் தனது இடுப்பு வாளை உருவி பயங்கரமாக சுழற்றி எதிர்படும் ஆங்கிலேய வீரர்கள் துவம்சம் செய்தான். இக்காட்சியை கண்ட தமிழக பணியாளர்கள் எல்லோரும் முடிந்த மட்டும் பதுங்கி இருக்க முருகன் தன் காதலனை காப்பற்றும் பொருட்டு ஒரு வாளை எடுத்து கொண்டு ஓடினான். ஆவேசமாக எதிர்படும் ஆங்கிலேயர்களை வெட்டி வீழ்த்தினான். இருவரும் முடிந்த மட்டும் போராடினர் ஆனால் செபாஸ்டியன் அளவுக்கு முருகனிடம் வாள்வீச்சு பயிற்சி இல்லாமையால் முருகன் கைவாளை தவறவிட்டான். தாமதிக்கும் ஒவ்வொரு நொடியும் ஆபத்து என்பதால் வேறுவாள் எடுக்கும் பொருட்டு பின்னோக்கி நடந்து ஓடவும் நான்கைந்து ஆங்கிலேய வீரர்கள் அவனை மடக்கிபிடிக்கவும் சரியாக இருந்தது. முயன்ற மட்டும் திமிறிப்பார்த்தான் ஆனால் அவர்கள் முருகனை விடாப்பிடியாக பிடித்து மாற்ற பணியாளர்களை கைது செய்து அமர்த்தியிருக்கும் இடத்தில் சென்று துப்பாக்கி முன்னையில் அமர வைத்தனர்.

அதற்குள் அங்கு இருக்கும் பெரும்பாலான பிரெஞ்சுவீரர்கள் கொல்லப்பட்டு ஆங்கிலேயர்கள் வெற்றியின் விளிம்பில் நின்று கொண்டிருந்தனர். எத்துனை ஆங்கிலேய வீரர்கள் இறந்தாலும் அதற்கீடாக அங்குபுதியவர்கள் வந்து கொண்டே இருந்தனர்.

பெரும்பான்மை ஆங்கிலேயர்களுடன் போரிட்டு கொண்டிருந்த சொற்ப பிரெஞ்சு வீரர்களில் நமது செபாஸ்டியனும் ஒருவன் என்பதால் நிர்கதியாய் நிற்கும் அவர்களும் கனபொழுதில் சுற்றி வளைக்கப்பட்டு கைதுசெய்யப்பட்டனர். இதற்கிடையே கோட்டைக்குள் பதுங்கியிருந்த டிசோசா கலெக்டரும் கண்டறியப்ட்டு கைதுசெய்து கொண்டுவந்து நிறுத்தபட்டான். சூரியன் சாய்ந்து இருள் கவ்வதுவங்கிய நேரத்தில் அந்த போர் ஒரு முடிவுக்கு வந்திருந்தது. கைது செய்யப்படிருக்கும் தமிழக பணியாளர்களை கொண்டு கோட்டை முழுவது தீப்பந்தங்கள் ஏற்றப்பட்டன.

இத்துணை கவரத்திலும் செபாஸ்டியன் உயிரோடு இருக்கிறானே  என்று முருகன் மனநிறைவோடு பொன்மாரியம்மனுக்கு நன்றி கூறினான்.
பிரெஞ்சுகைதிகளை என்னசெய்யலாம் என்பதைப்பற்றி வெற்றி விருந்துக்கு பிறகு முடிவுசெய்து கொள்ளலாம் என ஆங்கிலேய தரப்பு முடிவு செய்து ஒருவிருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தது. ஆங்கிலேயர்கள் அவர்களுடனேயே கொண்டுவந்திருந்த உணவு பொருட்கள் சீமை சாரயங்கள் என ஆங்கிலேய சமையல் காரர்களின் கைவண்ணத்திலேயே அந்த விருந்து தாயராகி கொண்டிருந்தது.

போரில் மரணமடைந்து ரத்த சகதியாக கிடக்கும் உடல்களை பிரெஞ்சுப்பிணங்கள் தனியாக ஆங்கிலேயப்பிணங்கள் தனியாக என வகை பிரித்து குமிக்கும் வேலை தமிழக பணியாளர்களுக்கு ஒதுக்கபட்டிருந்தது.
முருகன் சகத்தமிழர்களுடன் இணைந்து பிணங்களை தரத்தரவென்று இழுத்து குமித்து கொண்டிருந்தான். ஆனால் அவனது மனம் முழுவதும் செபாஸ்டியனை சுற்றியே இருந்தது.

கோட்டையின் நடுமைதானத்தில் அவர்கள் வெறும் மணலில் அமரவைக்க பட்டிருந்தனர். மொத்தம் இருபது பேர் மிச்சம். அதில் செபாஸ்டியனும் ஒருவன். குத்துகால் இட்டபடி கையிரண்டையும் முட்டியில் சேர்த்துகட்டிகொண்டு வேதனையும் விரக்தியும் கலந்த பார்வையை அவன் முருகன் மீது செலுத்திகொண்டிருந்தான்.

எங்கேயோ பிறந்து எங்கேயோ வளர்ந்து இங்குவந்து உன்னை ஏன் நான் பார்க்க வேண்டும்? உன்னுடன் காலம் முழுதும் சேர்ந்து வாழ ஏன் நான் ஆசைப்பட வேண்டும்? ஆசைபட்டவாழ்க்கை நமக்கு கிடைக்குமா? என அடுத்த நொடியில் உயிருக்கு உத்திரவாதம் இல்லாத நேரத்திலும் செபாஸ்டியன் முருகனை நினைத்து பொருமினான்.

இரவும் பகலும் அனைத்து கிடந்து அன்பில் திளைத்த அந்த உடல்களுக்கு ஒரு தொடுதலேனும் கிடைக்குமா இனி!?. அடேய் என் செம்பு உன்ன என்ன பண்ண போறாங்கனு தெரியலியேடா இந்த பாவிங்க? கடல்தாண்டி கப்பலேறி என்ன இப்புடி ஒரு வேதணைக்கு ஆளாக்கதான் வந்தியாடா? செம்பு உன்ன கட்டி பிடிச்சுக்கணும் போல இருக்கேடா ஆனா கிட்டகூட நெருங்க முடியாத பாவியா இருக்கேனேடா! என்று முருகனும் தன் மன்கேதத்தை நினைத்து கண்ணீர் சொறிந்தான்.

ஒருவழியாக பிணங்கள் குவிக்கும் வேலை முடிவுக்கு வந்தது. அங்கு இருக்கும் பெரியநீர் தொட்டிக்கு சென்று தன் உடல் இரத்தக்கறைகளை கழுவி கொண்டான் முருகன். அதே சமயம் பிரெஞ்சுகைதி ஒருவன் தைரியமாக எழுந்து மிகுந்த தாகமாக இருக்கிறது குடிக்க தண்ணீர் வேண்டும் என ஆங்கிலத்தில் உரக்க கத்தினான்.
இந்த செய்தி உடனேயே தளபதியின் காதுகளுக்கு போய் சேர்ந்தது. பரவாயில்லை போனால் போகிறது தண்ணீர் கொடுங்கள் என்று அனுமதியளித்தான் அந்த கொடுமைக்கார மகராஜன்.

வெளியேறிய ஆங்கேலேயே அதிகாரி தண்ணீர் தொட்டியருகே நிற்கும் முருகனிடம் அவர்களுக்கு குடிக்க தண்ணீர்கொடு என்று தமிழில் உத்தரவிட்டான்.
செபாஸ்டியனை அருகில் சென்று பார்ப்பதற்கு இப்படி ஒரு வாய்ப்பா? என ஆனந்த பட்டான் முருகன். அருகில் இருந்த தோண்டியில் தண்ணீர் சேந்திகொண்டு பிரெஞ்சுகைதிகளிடம் சென்றான் முருகன். அவர்கள் ஒவ்வொருவராக கையை குவித்து காத்திருக்க தண்ணீரை சாய்த்தான். திட்டமிட்டே கடைசியாக செபாஸ்டியனிடம் சென்றான்.

செபாஸ்டியன் கைகளை குவித்தான் அதில் தண்ணீருக்கு பதில் கண்ணீர் விழுந்தது.
அழாத முருகா!! இவ்வளவு நேரம் எங்கள ஒன்னும் செய்யல எப்படியும் வெளிய விட்ருவாங்க நீ கவலைப்படாம இரு நாம கண்டிப்பா பிரான்ஸ் போய்டுவோம் என்றான்.
முருகனுக்கு பேச நா எழவில்லை தண்ணீரை ஊற்றினான். உனக்கு மட்டும் ஏதாவது ஆச்சுனா ஒரு பறங்கியனையும் சும்மா விட மாட்டேன். என்று ஆவேசமாய் சொல்லிவிட்டு அங்கிருந்து நகர்ந்தான் முருகன். அதில் காதலின் வெறி நிரம்பி வழிந்தது.

அதே சமயம் தளபதி தன் அறையில் இருந்து வெளியேறினான். அவனுக்கு நிற்கும் இடத்திலேயே நாற்காலி போடப்பட்டிருந்தது.
அவனுக்கு நேரெதிராக இருபது சிறிய பீரங்கிகள் கொண்டுவந்து நிறுத்த பட்டன. ஆங்கிலேய வீரர்கள் தமிழக பணியாளர்களை ஒருங்கிணைத்து ஒரு தனியிடத்தில் துப்பாக்கி முனையில் நிறுத்தினர்.
செபாஸ்டியன் உட்பட பிரெஞ்சுவீரர்கள் இருபது பேரும் இருபது பீரங்கி குழாய்களுக்கு முன்பு கொண்டுவந்து நிறுத்தப்பட்டனர். அங்கு என்ன நடக்கபோகிறது என்று தோராயமாக அனைவருக்கும் புரிந்து போயிற்று. துப்பாக்கி முனையில் நிற்கும் முருகன் புழுவாய் துடித்தான்.

தமிழக பணியாளர்கள் வாய்விட்டு வேண்டாம் வேண்டாம் என்று கூவினர். முருகன் வாய்விட்டு செம்பு போபோறியாடா?! என்னைவிட்டு போவபோறியாடா?  நீ சாவுறத பக்கவாடா இப்புடி விழுந்து விழுந்து உன்ன விரும்புனேன்? அதுக்கு நானே செத்துருக்கலாமேடா என வாய்விட்டு கதறினான் முருகன். செபாஸ்டியன் கூட்டத்தில் முருகனை தேடவில்லை. இத்தகு சூழ்நிலையில் முருகன் படும் வேதனையை காண அவன் மனம் ஒப்பவில்லைபோல.
கதறிகொண்டிருந்த முருகன் செய்வதறியாது தகித்தபடி கோட்டை வளாகத்தை ஒருமுறை சுற்றி பார்த்தான்.

கனபொழுதில் அவன் மனதில் ஒரு எண்ணம் தோன்றியது. நடக்க போகும் கோரக்கட்சியை காண இயலாதவன் போலமெல்ல பின்வாங்கினான். ஆங்கிலேய வீரர்கள் சற்று கவனக்குறைவாக இருந்தனர். பின்வாங்கிய முருகன் கோட்டையின் உள்சுற்று வராண்டாவை அடைந்தான் தூண்களில் வரிசையாக தீப்பந்தங்கள் எரிந்து கொண்டிருந்தன. ஒருத்தூணுக்கு கீழே குடம் ஒன்று இருந்தது. அதனை ஆர்வமாய் தோளில் தாங்கி கொண்டான் முருகன். சட்டென கோட்டையின் கீழ்திசைக்கு மறைந்து மறைந்து நடை போட்டான் அவன்.

இருபது உயிர்கள் சிதறபோகும் ஆவலில் அமைதியாக இருந்தது அந்த கோட்டை. ஆங்கிலேய தளபதி தமிழும் ஆங்கிலமும் கலந்து ஆங்கிலேயரை எதிர்பவர்களுக்கு இதுதான் நிலை என்பது போல ஒரு உரையாற்றிகொண்டிருந்தான். தாமதிக்கும் ஒவ்வொரு நொடியும் தன் திட்டம் பாழ்பட வாய்ப்பிருப்பதை எண்ணிய முருகன் வேகமாக ஓடினான்.

இங்கு பீரங்கிகள் முழங்க தயாராய் இருந்தன. முருகன் தான்நிற்கும் இடத்தில் இருந்து எட்டிபார்த்தான் பீரங்கிகள் வெடிக்க ஏதுவாக விசைகள் இழுக்கப்படுவது தெரிந்தது. அவன் மனம் இப்பொழுது கல்லை போல இறுகியிருந்தது. தன்னுடைய செபாஸ்டியனை நினைத்து கொண்டு குடத்திலிருந்த நல்லெண்ணையை தலையில் ஊற்றினான். அருகிலிருந்த தீப்பந்தத்தில் தன் முண்டாசை அவிழ்த்து பிழிந்து பற்றவைத்து இடுப்பில் கட்டினான். தீ மளமளவென்று வேட்டியில் பிடித்தது.

 அங்கு பீரங்கிகள் வெடிக்கும் சத்தம் படார் என்று முருகனின் காதுகளில் ஒலித்தது. இடுப்பில் எரியும் தீ அவனை ஒன்றும் செய்யவில்லை ஆனால் பீரங்கி வெடித்த ஓசை காதுகளை சுட்டது. தாமதிக்காமல் ஓடினான். அது பீரங்கிகளுக்கு திணிக்கப்படும் வெடிமருந்து தொட்டிகள் இருக்கும் இடம். தொட்டிகள் எந்தவித பாதுகாப்பின்றி திறந்துகிடந்தது.

மளமளவென்று எம்பி ஒரு தொட்டியில் ஏறி நின்று பீரங்கி வெடித்தப்பகுதியை பார்த்தான் சுவர்களெல்லாம் இரத்தமாய்தெறித்து இருந்தது. செபாஸ்டியனை நினைத்து கொண்டு தொட்டிக்குள் குதித்தான் முருகன்.

அந்த வெடிமருந்து தொட்டி பயங்கர ஓசையுடன் வெடித்து அருகிலுள்ள தொட்டிகளையும் வெடித்தது. அந்த மாபெரும் வெடிப்பின் அதிர்வை தாங்காமல் ஆலம்பரை கோட்டையின் சுவர்கள் அடியோடு ஆடியது.

ஒரு காதலின் சக்தியாய் வெளிப்பட்ட அந்த தீப்பிழம்பு அங்கிருந்த ஆங்கிலேயர்கள் அனைவரையும் சுட்டுபொசுக்கியது. மிச்சசொச்சமாய் இருந்த அனைவரும் அந்த மாபெரும் வெடிப்பில் மாண்டு போயினர். ஆலம்பரை கோட்டையின் கொத்தளங்கள் கூறு கூறாய் சிதறி வெறும் செங்கல் மேடாய் சிதைந்து போனது.

அங்கு ஆங்கிலேயனும் வெல்லவில்லை பிரெஞ்சுகாரனும் வெல்லவில்லை முருகன் செபாஸ்டியனின் காதல் வென்றிருந்தது. மாபெரும் மாளிகை மண்மேடாய் போனாலும் காதலனிடம் கடைசியாக கொடுத்த உறுதியை செயல்படுத்திய முருகனின் ஆத்மா அங்கு தனியே தவிக்கும் செபாஸ்டியனின் உயிரோடு கலந்தது.

காலங்கள் பல உருண்டு ஓடினாலும் அங்கு வீசும் காற்றும், அடிக்கும் அலையும், கிடக்கும் மணலும் யாருமறியா இந்த அற்புத காதலுக்கு சாட்சியாய் நிற்கிறது. ஒருமுறை சென்று பார்த்து வாருங்கள் ஆலம்பரை கோட்டையின் இடிபாடுகளை. முருகனும் செபாஸ்டியனும் கைகளை கோர்த்தபடி அங்குதான் மணல்வெளியில் நடமாடி கொண்டிருப்பார்கள்


ஆலம்பரை கோட்டையின் கதை முடிந்தது.




வெள்ளி, 11 செப்டம்பர், 2015

ஆலம்பரை கோட்டை (பாகம் II)



                                                                         6
                              உடைக்குள் மறைத்து

இரவுநேர உடைக்குள்புகுந்து தமிழகபாணியில் சுட்டுதரப்பட்ட தோசைகளை துவையல் தொட்டு தின்றுவிட்டு படுக்கசென்றான் செபாஸ்டியன், முருகனின் உடல்மனம் இன்னும் அவனிடம் வீசிக்கொண்டு இருப்பதாக தெரிந்ததது. என்ன ஒரு அணைப்பு என்ன ஒரு சுவை என்ன வேகமான இயக்கம் என முருகனையே முழுதும் நினைத்தவனுக்கு சக நண்பர்கள் பாய்படுக்கைகளை சுருட்டி கொண்டு எங்கோ புறப்படுவது தெரியவே என்ன வென்றுவிசாரித்தான். அவர்கள் கோட்டையின் நிலாமுற்றத்துக்கு படுக்க சென்றுகொண்டிருந்தனர். இவனும் சேர்ந்து கொண்டான். கிழக்கிலிருந்து மேற்காக கோட்டையின் தென்புறத்தில் இருக்கும் நீளமான மச்சு அது. செங்கல் பதிக்கப்பட்ட தரையில் குளுமையாக கடற்காற்று வீச படுத்து கொண்டான் செபாஸ்டியன்.

மறுநாள் பொழுது விடிந்த பொழுது செபாஸ்டியனின் படுத்த இடத்தில இருந்து எழுந்து பார்த்தான். ஆலம்பரை கடற்கரை பட்டினம் முழுவதும் தெரிந்தது. கோட்டையின் சுற்றுப்புற வீதிகளின் பல வீடுகளின் கொல்லை புறம் தெளிவாக தெரிந்தது. அதில் ஒருவீட்டின் கொள்ளையில் முருகன் போர்வையுடன் மாமரத்தடியில் உறங்குவதும் தெரிந்தது. உற்சாகத்தின் உச்சிக்கு போய் முருகனின் அவிழுந்துகிடக்கும் கேசத்தையும் அழகு ததும்பும் முகத்தையும் பார்த்து கொண்டிருந்தான் செபாஸ்டியன்.

 சிறிது நேரத்தில் யாரோ ஒருபெண் போர்வையை முழுவதும் விளக்கி கீழே எறிந்துவிட்டு கடுமையாக பேசிச்சென்றாள். கண்களை விழித்து பார்த்த முருகன் கைகள் இரண்டும் மேலே தலைக்கு அண்டை கொடுத்த படி மல்லாக்க படுத்திருந்தான். அவனது காட்டுடல் மேனியழகு காந்தவிசை போல ஈர்க்கவே முருகனின் மீது ஒட்டிக்கொள்ளும் எண்ணத்தில் துடிக்கும் இரும்பு துண்டாய் தவித்தான் செபாஸ்டியன். சிறிது நேரம் அவன்பார்வை நிலைத்தது ஆனால் அதற்குள் வீரர்கள் பகல்நேர கோட்டை காவலை கவனிப்பதற்காக ஒவ்வொருவராக எழுந்து இறங்கி சென்றனர்.

அதனல் செபாஸ்டியனும் இறங்கினான்.
நேற்று அடித்த காம மழையில் காதல் காளான் முளைத்திருக்க செபாஸ்டியானும் முருகனும் நாள் முழுவதும் கிடைக்கும் சந்தர்ப்பத்தை கண்களால் பார்த்து இரசித்துகொண்டனர். பிறகு இரவு நேரம் இடத்தை மாற்றி மாயக்கா மண்டபத்தில் புசித்துகொண்டனர். நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக இருவரும் ஒன்றோடொன்றாய் கலந்த பாலும் சக்கரையுமாய் கிடந்தனர். முதல்நாள் போல நேரம் கடத்தாமல் காமலீலைகளையும் காதல் விளையாட்டுகளையும் முடித்து கொண்டுவிடுவதால் பிரங்க்ளினுக்கு தேடுவதற்கு அவசியம் இல்லாத சூழ்நிலை உண்டாகி விட்டது. இவர்களும் கவலை இன்றி காலவெள்ளத்தில் காதல் படகோட்டினர்.

அடித்துவந்த வெள்ளம் அணையில் தேங்குவது போல வந்தது ஒரு சோதனைக்காலம் மாரியம்மன் திருவிழாவாக. அன்று பெரிய துரையின் பிறந்த நாள் ஆதலால் கோட்டை விழாக்கோலம் கொண்டிருந்தது. அனைத்து பிரெஞ்சு வீரர்களுக்கும் சீமைசாராயமும் கோழிக்கறியும் வேண்டும் அளவுக்கு தரபட்டது. பாண்டிச்சேரியில் இருந்து நிறைய தாசிகள் வந்திருந்தனர். ஆடல் பாடல் கூடல் காட்சிகள் வெகு விமரிசைகாக அரங்கேறியது கோட்டையின் உள்ளே, உணவுப் பணியாளர்களும் தாசிகளையும் தவிர வேறு தமிழர்களுக்கு அம்மாதிரியான கொண்டாட்டங்களில் அனுமதி இல்லை.

செபாஸ்டியனுக்கு ஒருபுட்டி சீமை சாராயமும் கோப்பையும் வேண்டுமட்டும் பொறித்த கோழி இறைச்சியும் கிடைத்தது. அவற்றை அங்கேயே சாப்பிட மனம் இல்லாதவன் அன்பு காதலனுக்கு கொடுக்கும் நோக்கத்தில் உடைக்குள் மறைத்து எடுத்து கொண்டு கோட்டையை விட்டு வெளியேறினான்.
பனங்கள்ளையே குடித்து அலுத்து போன முருகன் சீமை சாராயம் குடிக்கும் ஆவலை ஒருமுறை செபாஸ்டியனிடம் சொல்லியிருந்தான். அதன் பொருட்டே ஒருசில சிரமத்தை கடந்து மாயக்கா மணடபத்தில் இருக்கும் முருகனை நோக்கி பயணிக்கிறது இந்த சீமை சாராயமும் கோழிக்கறியும்.

                            7
                    பிரான்ஸ் பயணம்

வழக்கமாக வரும் நேரத்தை விட இன்று கூடுதல் நேரமாகி விட்டதாய் சிறிது நேரம் கோவித்துகொண்டான் முருகன். அந்த போலிக்கோபத்தை இரசிப்பது போல கெஞ்சிகொண்டு அவனது முகத்தை பிடித்து நச்சென ஒரு முத்தத்தை பதித்தான் செபாஸ்டியன். உடனே பதறிஎழுந்த முருகன்.

அய்யயோ இன்னைலருந்து பத்து நாளுக்கு விரதம் என்றான்.
விரதமா? என்று கேட்டபடியே உடைக்குள் இருந்த கோழிக்கறியையும் சாராயத்தையும் வெளியே எடுத்து வைத்தான் செபாஸ்டியன்.

அய்யயோ இதுலாம் என்ன?

உனக்காகத்தான் முருகா!! எனக்கு கொடுத்தத சாப்பிடாம கொண்டு வந்தேன். சீக்கிரம் வா ரெண்டு பேரும் சேந்து குடிப்போம் என்றான். முருகனுக்கு மனம் மிகவும் குழைந்தது.

தன் அன்புக்கதலனை வாஞ்சையுடன் பார்த்தான்.
இல்ல செம்பு இதலம் என்னால இன்னைக்கு சாப்பிட முடியாது
ஏன்? என்றபடி நிமிர்ந்தான் அவன்

எங்க ஊர் மாரியம்மனுக்கு காப்பு கட்டியிருக்கு தீமிதிக்கிற வரைக்கும் விரதம் என்றான் அவன்.
செபாஸ்டியன் ஒன்றும் புரியாமல் விழிக்கவே முருகன் தொடர்ந்தான்

எங்க கடவுள் மாரியம்மனுக்கு வருசா வருஷம் தீமிதி திருவிழா பன்னுவோம். எனக்கு வேண்டுதலிருக்கு நானும் தீமிதிக்கணும் அதுனால நான் இன்னைலருந்து திருவிழா நாள் வரைக்கும் கறிமீன் திங்காம பாய்ல படுக்காம உன்னோடையும் படுக்காம விரதம் இருக்கணும் ன்னு கையில் கட்டியிருந்த மஞ்சள் நூலையும் வேப்பிலையும் காட்டிய பொழுது செபாஸ்டியனுக்கு ஆசையுடன் கொண்டு வந்த பொருள் வீணாய் போய்விட்டதென்று வருத்தமாக இருந்தது.

நான் சாப்பிடலனா பரவா இல்ல நீ சாப்பிடு என்று எடுத்து கொடுக்க வந்த முருகனிடம் ச்சே ச்சே நீ விரதம் இருக்கறீன்னா நானும்தான் விரதம். இனிமே நானும் உன்ன மாதிரி இருக்குறேன் நீ எப்ப பழைய மாதிரி ஆவுறியோ அதுவரைக்கும் நானும் உனக்காக இருப்பேன் என்று கூறி கட்டி பிடிக்க முனைந்தவன் தயங்கி நின்றான்.

ச்சே இதுமாரி அன்பா கட்டிபுடிச்சுகிறதுல தவறு இல்லடா என்று முருகன் அவனை இழுத்து அனைத்துக்கொண்டான்.
இருவரும் உணர்ச்சி பெருக்கெடுக்க மண்டபத்தில் அமர்ந்து கொண்டு பேசிக்கொண்டிருந்தனர்

ஆம்பளையும் பொம்பளையும் இதுமாதிரி பழகுனா கல்யாணம் பண்ணிப்பாங்க நாம பழகுறமே இதுக்கு என்ன முடிவுடா செம்பு? என்றான் முருகன்.

ஏன் நாம கல்யாணம் பண்ணிப்போம் என்று சாதாரணமாக சொன்னான் அவன்.

முருகனுக்கு சிரிப்பாக இருந்தது. அது எப்டி ஆம்பளையும் ஆம்பளையும் கல்யாணம் பண்ணிக்க முடியுமா? ஊர் உலகம் என்ன சொல்லும் என்று அடக்க முடியாமல் சிரித்தான் முருகன்.

ஏன் எங்க நாட்டுல இதுலாம் சகஜம் கல்யாணம்ன்னு பண்ணிக்க மாட்டங்க ஆனா ஒண்ணா சேந்து வாழுவாங்க. ஆணும் ஆணும் கல்யாணம் பண்ணிக்கிறதுக்கு எங்க ஊர்ல அனுமதி கிடையாது ஆனா சேந்து ஒரு வீட்ல வாழுறதுல யாரும் ஆட்சேபனை பண்ண மாட்டாங்க. என்று செபாஸ்டியன் சொல்லும் போது

ஆச்சர்யத்தில் விழி விரிந்தான் முருகன்.
அப்படின்னா நாம் உங்க ஊருக்கு போய்டுவோமா? என்று விளையாட்டாக சிரித்த படி கேட்டான் முருகன்.

இதனை சற்றும் எதிர்பார்க்காத செபாஸ்டியன். முருகனை இருக்க தழுவிக்கொண்டு முருகா இத நானே உண்ட கேக்கணும்ன்னு நெனச்சேன் ஆனா நீங்களாம் தாய்மண்ணின் மீது அதிக பற்று கொண்டவர்கள், நான் இது மாதிரி கேட்டா என்ன தப்பா நினைப்பனு கேக்கல, உண்மையா என்னோட வந்துடறியா முருகா? நாம் பிரான்ஸ்க் கு போய் சாவுற வரைக்கும் ஒன்னாவே இருப்ப்போம், என்னால நீஇல்லாம இருக்க முடியாது முருகா என்று கண்ணீர் விட்டு கசிந்தான் செபாஸ்டின்.

முருகனுக்கு மனம் நெகிழ்ந்தது. நீ மேகத்திகாரன் வெள்ளைத்தோல் நான் கருப்புதோல் அடிமைநாய் உன்னோட எப்டி அங்க வர முடியும் என்று கெஞ்சினான் முருகன்.

ஏன் முடியாது எங்கள்ள பணிவிருப்பம் இல்லாதவங்கள பிரான்ஸ்க்கே திருப்பி அனுப்புறதுக்காக அடுத்த மாசம் ஒரு கப்பல் பாண்டிச்சேரில இருந்து கெளம்புது. அதுல ஆயிரகணக்கான இந்திய சேவகர்களையும் அழைச்சிட்டு போறாங்க. அங்க உள்ள பிரான்ஸ்காரங்க பெரும்பாலும் பெண்களைத்தான் அடிமையா விலைக்கு வாங்குவாங்க ஆண்கள அதிகமா விலைக்கு வாங்க மாட்டாங்க. நீ பிரான்ஸ் போறதுக்கு விருப்பம் தெரிவிச்சு கோட்டையில உன் பேர பதிஞ்சின்னா நானும் வேலை வேணாம்னு எழுதிகொடுத்துட்டு கெளம்பிடுவேன். எப்பாடு பட்டாவது உன்ன என்காசு பணத்தலாம் கொட்டி வாங்கிடறேன்.

அப்பறம் நமக்கு இடையில யாரும் இருக்க முடியாது.
அதிகாரமெல்லாம் இங்கதான். உன்ன நான் விலை கொடுத்து வாங்கிட்டேன்னா என்ன தவிர வேற யாரும் உன்ன சீண்ட முடியாது என்று செபாஸ்டியன் கூறிய பொழுது முருகனின் தாய் அண்ணன் தந்தை எல்லோரும் முருகனுக்கு கண் முன் வந்து சென்றனர். எல்லோரையும் மீறிக்கொண்டு செபாஸ்டியன் முன்பாக தெரிந்தான்.

உயிர் போனாலும் இனி செபாஸ்டியனுடன் என்று முடிவு செய்து கொண்டான். ஆனால் ஆச்சர்யம் விலகவில்லை அவனுக்கு,

இதெல்லாம் நடக்குமா செம்புவும் நானும் காலமுழுதும் ஒன்னாக இருக்க முடியுமா என்று யோசித்தவனுக்கு செபாஸ்டியனொடு வாழ வேண்டும் என்ற ஆசையிலும், இங்கிருந்தால் ஒரு பெண்ணை கட்டிக்கொண்டு மாரடிக்க வேண்டும் என்ற எண்ணத்திலும் கப்பலேறி பிரான்ஸ் செல்லுவது என்று முடிவு எடுத்தான். செபாஸ்டியனிடம் சம்மதம் கூறினான்.

காலவெள்ளத்தில் இனி அவர்களை பிரிக்க எவருமில்லை என கற்பனை கோட்டை கட்டினர் இருவரும், ஆனால் ஆலம்பரை கோட்டையை நெருங்கி கொண்டிருக்கும் ஆபத்தை அங்கு யாரும் அறிந்திருக்க வில்லை.
8
                               தீமிதி
ஆலம்பரை கோட்டைவாசலில் இருந்து நடக்கும் தொலைவில் இருக்கிறது பொன்மாரியம்மன் கோயில். மிகப்பழங்காலம் முதல் அந்தக்கோயில் அங்கு இருந்து வருகிறது. பல்வேறு அரசர்களின் காலத்தில் பல்வேறு மானியங்களையும் பல்வேறு பெயர்களையும் பூண்டு அந்த பகுதியில் அருள்பாலிக்கும் அம்மனுக்கு இந்த காலத்தில் பொன்மாரியம்மன் என்ற பெயர். அம்மனுக்கு வருடாவருடம் ஆலம்பரை கிராமத்தாரால் வெகுவிமரிசையாக நடத்தப்படும் தீமிதிதிருநாளுக்கு காப்புக்கட்டி பத்துநாள் ஓடியே போய்விட்ட நிலையில் இன்றுமாலை தீமிதி. பொழுது விடிந்து கொண்டிருக்கும் இந்நேரத்தில் ஆலம்பரை கிராமத்து பெண்கள் மாவிளக்கு பூமாலை என்று தெய்வகாரியங்களில் ஈடுபட்டிருக்க முருகனின் தாயும் அதே வேலையில் ஈடுபட்டு கொண்டே கோட்டைக்கு புறப்படும் முருகனை கேள்விகேட்டு கொண்டிருந்தாள்.
நல்லநாள் பெருநாள் கூடபாக்காம இன்னைக்கு வேலைக்கு போய்தான் ஆவணுமா? தொரைகிட்ட இன்னிக்கு தீமிறினு சொல்லி விடுப்பு கேக்க வேண்டியதான. ங்கொப்பாரும் தோனிக்கு பூட்டாரு, ஒன்ணனும் எங்கயோ கெளம்பி பூட்டான் நீயாவது ஊட்ல இருப்ப போய் மாவெளக்கு போடலாம்னு பாத்தேன் என்றாள்.
ம்மா செத்த சும்மா கெடக்கியா அப்பாரும் அவனும் செத்தகழிச்சு வருவாங்கள அப்ப இட்டு போயேன், நான் தீமிறிக்க சீக்கிரமே வந்துடுவேன் என்று சொல்லியபடி தலைப்பாகையை கண்ணாடியில் சரிபார்த்து கொண்டு வேகமாக நடைபோட்டான் கோட்டைக்கு.
கோட்டைவாசலில் ஊர்காரர்கள் சிறுபந்தலிட்டு தோரணம் கட்டிகொண்டிருந்தார்கள். பிரெஞ்சுவீரர்கள் அதனை ஆவலுடன் வேடிக்கை பார்த்து கொண்டிருந்தனர். கோயில் திருவிழாவுக்கு மரியாதை நிமித்தமாக சிறப்பு அழைப்பு டிசோசாவுக்கு வைக்க பட்டுள்ளது. அது எப்படி தீயில் நடக்க முடியும் கால் சுடுமே?! என ஆச்சர்யமான அந்த வைபவத்தை எப்படியாவது பார்க்க வேண்டும் என்பது பெரும்பாலான பிரெஞ்சு வீரகளுக்கு ஆவலாகவும் இருந்தது.
யாரோ சிலர் தீயில் இறங்குவதே அவர்களுக்கு இத்துணை ஆவலாய் இருக்க தன்ஆசை காதலன் தீயில் இறங்க போகிறான் என்ற எண்ணமே செபாஸ்டியனுக்கு திகிலாய் இருந்தது. கடந்த பத்து நாட்களாய் மாயக்கா மண்டபத்தில் இதுகுறித்து செபாஸ்டியன் கேட்ட கேள்விகளுக்கு விளக்கம் கூறியே அலுத்துவிட்டான் முருகன்.
எப்டிடா முருகா கால் சுடாதா, வேற ஏதும் கடினம் இல்லாம வேண்டிக்க கூடாதா? இத நீ செய்யலைன்னா என்ன ஆகும்? கால் சுடுமா? நெருப்பு எரியும் போது அதுல இறங்குனா துணிபத்திக்காதா?
அய்யோ மாரியாத்தா இந்த அசடுகிட்ட இருந்து என்ன காப்பாத்தேன்
நெருப்பு எரியும் போது இறங்க மாட்டாங்க, விறகுக்கரி கனகனன்னு கெடக்கும் அதுல இறங்கி போவாங்க,
அது எப்டி சுடாதுன்னு சொல்ற..
அது அப்டித்தான் சுடாது எல்லாம் மாரியாத்தவோடா சக்திதான்.
இதுவரைக்கும் யாருக்குமே சுட்டது இல்லையா..?
இப்ப நீ இதேதான் பேசிகிட்டு இருப்பியா.. இல்லனா நான் போகவா?
செபாஸ்டியனுக்கு ஆர்வம் கொப்பளித்தது அடக்க மாட்டாதவனாய் கேள்விகேக்க, முருகன் இப்படி பதில் சொல்லவும் அவனுக்கு முகம் சுருங்கியது. திரும்பி உட்கார்ந்து கொண்டான்.
அய்யயோ!! என் செல்ல சொம்பு இல்ல.. சும்மா வெளையாட்டுக்கு சொன்னண்டா.. என்று அருகில் வந்து அமர்ந்து கொண்டு செபாஸ்டியனை தோளில் சாய்த்து கொண்டான்.  வெற்று மார்பாக இருந்த முருகனின் உடலில் இருந்து மெல்லிய சந்தன வாடையும் வியர்வை வாடையும் கலந்து வந்து செபாஸ்டியனை பாடாய்படுத்தியது. மிகவும் கடினப்பட்டு தன்னை அடக்கி கொண்டான் செபாஸ்டியன். ஏறக்குறைய ஒன்பதுநாள் பல்கடித்து கொண்டு இருந்து விட்ட நமக்கு இன்னும் ஒருநாள் முடியாதா என்று நினைத்தபடி முருகனின் மார்பில் ஏக்க பெருமூச்சை வெளிபடுத்தவே அந்த சூடான காற்று முருகனின் மார்பு முடிகளில் அலைந்து மத்திம பாகத்தின் வழியே வெளியேற, முருகன் சூடாக, முருகனின் வேல் எதற்கோ தயாராகி கொண்டிருந்தது.
இருவரும் தெய்வத்துக்கு மதிப்பளித்து விலகி அமர்ந்தனர்.  முருகா நாளைக்கு மதியம் பிரான்ஸ் போக விருப்பம் இருக்குற ஆளுங்கள பேர் சேக்குறாங்க நீ நாளைக்கு வருவியா மாட்டியா? என்றுகேட்டான்  செபாஸ்டியன்
என்ன இப்டி கேக்குற நாளைக்கு சாயுங்காலம்தான் தீமிறி நான் கண்டிப்பா வருவேன் வந்து என்பேர கொடுக்குறேன். சரி நீ சாயந்திரம் கோயிலுக்கு வரமுடியுமா அதுக்குள்ளே வேல முடிஞ்சிடுமா?
ம்ம் என்னனு தெரில.. இருந்தாலும் அந்த நேரத்துல வரது கடினம்தான். கோட்டை மதில்ல நின்னாதான் கோயில் தீக்குண்டம்லாம் நல்லா தெரியுதே இங்கயே இருந்து பாக்குறேன். நீ எல்லாத்தையும் முடிச்சுகிட்டு சீக்கிரமா மாயக்கா மண்டபத்துக்கு வந்துடு உனக்காக நான் வேலையலாம் முடிச்சிட்டு காத்திருப்பேன் என்றான் செபாஸ்டியன்

                                 9
                             மருமகன்
மாலைநேரம் வந்தது கோட்டை காவலில் ஈடுபட்டிருந்த பிரெஞ்சு வீரர்கள் ஆவலுடன் கோயில் பகுதியை வேடிக்கை பார்த்து கொண்டிருந்தனர். செபாஸ்டியன் கோயிலுக்கு நேரே அமைக்க பட்டிருக்கும் தீக்குழிக்கு நேராக நின்று கொண்டான் அந்த இடத்தில் இருந்து பார்க்கும் பொழுது கோயில் வாளாகத்தில் நடக்கும் சிறுஅசைவு கூட துல்லியமாக தெரிந்ததால் முருகன் எப்பொழுது வருவான், வந்தால் தீயில் இறங்கும் பொழுது எப்படி இருக்கும் என்று பார்க்கும் ஆவல் அவனுக்கு, கணகணவென்று எரியும் நெருப்பு எப்படி சுடாமல் இருக்கும் அதையும் பார்த்து விடுவோம் என்ற ஆவல் மற்றைய வீரர்களுக்கு. பொதுவாகவே அது ஒரு வியாபார தளம் என்பதால் நிறைய வனிகர்கள் வந்து தற்காலிக கடைகள் அமைத்திருந்தனர். கோயிலின் ஒருபுறத்தில் நாடக மேடை ஒன்றும் பாங்குற அமைக்கப்பட்டிருந்தது.
கடற்கரையில் இருந்து பூங்கரக ஊர்வலத்துடன் தீமிதிக்க போகும் அன்பர்களும் முருகனும் பக்தி பரவசமாக உறுமியும் உடுக்கையும் ஒலிக்க ஆலயத்தை நெருங்கி கொண்டிருந்தானர். உள்ளூர் மக்கள பக்தியுடனும் பிரெஞ்சுக்காரர்கள் ஆர்வத்துடனும் பார்த்தனர். ஏற்கனவே முந்தய ஆண்டுகளில் தீமிதி காட்சிகளை பார்த்திருந்த வீரர்கள் கூட ஆர்வத்தோடு பார்த்தனர். ஒவ்வொருவராக ஓட்டமும் நடையுமாக தீக்குழியில் இறங்கி வர, அதுவரை முருகனை வைத்த கண் வாங்காமல் பார்த்து கொண்டிருந்தான் செபாஸ்டியன்.
முருகன் குறுக்குமாலை தரித்து கச்சம்கட்டிய வேட்டியுடன் அவிழ்ந்து கிடக்கும் கேசத்துடன் ஈரதேகத்தவனாய் கையில் வேப்பிலை கொத்து கொண்டு அம்மனை பரவசத்துடன் பார்த்து கொண்டிருந்தான். அப்போதுகூட அவனது கம்பீரமான அழகு செபாஸ்டியனை பிடுங்கி தின்றது. ஒருமுறையாவது இங்கு திரும்பி பார்க்க மாட்டானா? நான் இங்க நின்னு பாக்குறத அவன் பாக்க மாட்டானா என்று செபாஸ்டியன் ஏங்கி தவித்தான்.
முருகனுக்கு நெருப்பு எந்த துன்பத்தையும் தரக்கூடாது என்று தன் கடவுளை கண்மூடி பிரார்த்தித்தான். முருகனின் முறை வந்தது. ஆரவாரம் இன்றி முருகன் அழகாக நெருப்புமேல் நடந்து சென்று கரை ஏறினான். செபாஸ்டியனுக்கு ஆர்வம் கொப்பளித்தது. ஓடி சென்றுமுருகனை அனைத்து கொள்ளவேண்டும் போல இருந்தது. முருகன் சென்ற பிறகும் நூற்று கணக்கானோர் காத்திருந்தனர் ஆனால் அவர்களை காணும் ஆவல் ஒன்றும் செபாஸ்டியனுக்கு இல்லை, அதற்குள் இவனது பணி நேரமும் முடிந்து போயிருந்தது.  மற்ற நண்பர்கள் ஆர்வமாக வேடிக்கை பார்த்து கொண்டிருக்க செபாஸ்டியன் மதிற்சுவர் படிகளில் இறங்கி வேகமாக ஓடினான். பெரும்பாலும் ஆளரவம் இன்றி கிடந்தது அவர்கள் தங்கும் இடம் சீருடையை களைந்து விட்டு செயற்கை நீச்சல் குளத்திற்கு சென்று முங்கிகுளித்தான், தேர்ந்தெடுத்த ஜிகினா சட்டை ஒன்றை எடுத்து மாட்டிகொண்டு விலை உயர்ந்த பிரான்ஸ் நாட்டு வாசனை திரவியங்களை பூசிக்கொண்டு இவன் கோட்டையை விட்டு வெளியேறிய நேரம் நன்கு இருட்டி இருந்தது.
தீமிதி முடிந்த கையோடு அரிச்சந்திர மகாராஜா நாடகம் துவங்கியிருந்ததால் பெரும்பாலான மக்கள் நாடக அரங்கின்முன்பு குவிந்திருக்க கோட்டைகாவலில் ஈடுபட்டிருக்கும் இரவு நேரக்காவலர்கள் கூட மதில்மேல் காலை தொங்கபோட்டு கொண்டு புரிகிறதோ இல்லையோ அந்த வேடிக்கையான நாடக மாந்தர்களின் ஒப்பனையையும் வினோத பாடல்களையும் இரசித்து கொண்டிருந்தனர். மொத்தத்தில் ஆலம்பரை நகரமே இன்னும் சிறுது நேரத்தில் சூழபோகும் மிகபெரிய ஆபத்தை அறியாமல்  களிப்பில் கிடந்தது.
செபாஸ்டியன் முருகனைக்கானும் ஆவலில் மாயக்கா மண்டபத்துக்கு சென்ற பொழுது ஏற்கனவே முருகன் வந்து காத்திருந்தான். அவனும் புதிதாக குளித்து அழகிய முறையில் உடையணிந்து மார்பை மறைக்காமல் தலைக்கு எளியதாய் ஒரு தலைபாகை கட்டி சந்தனம் மணக்க வந்திருந்தான்.
பத்துநாளாக அடக்கி வைத்திருந்த காமநதி கட்டாற்று வெள்ளமாய் பொங்கியது செபாஸ்டியனுக்கு முருகனை பார்த்த மாத்திரத்தில் ஓடி சென்று இறுக்கி அனைத்த படி கீழே விழுந்த வேகத்தில் வெறிபிடித்தவன் போல முருகனின் இதழ்களை பதம்பார்க்க துவங்கிவிட்டான் சற்றுநேரம் எதிர்பாராமல் நிலை குலைந்து போயிருந்த முருகன் ஆசைகாதலனின் ஆர்வத்தை வியந்தபடி கிடந்து தழுவி இன்பவெள்ளத்தை கூட்டினான். இதழ்கள் நான்கும் காலநேர எல்லைகளை கடந்து பற்களின் இடையே சிக்கி எச்சில் தேனில் ஊறிகொண்டிருக்க மெதுவாக ஆசைகாதலனை ஆசுவாசபடுத்தி முருகன் பேசத்துவங்கினான்.
செம்பு எழுந்திரு வா நம்ப வீட்டுக்கு போகலாம்
என்னது வீட்டுக்கா? அதெப்படி முடியும் வீட்டுக்கு போய் என்ன பண்ணுறது?
நீ வாயேன் சொல்லுறேன்
அதெப்புடிடா நான் உங்க வீட்டுகுள்ள வரும் போது எல்லோரும் பார்த்துடுவாங்களே
அதுக்கும் ஒரு வழி வச்சிருக்கேன் வா என்று மாயக்கா மண்டபத்தின் பின்புறமாக கொஞ்ச தூரம் இருட்டில் அழைத்து சென்றான் செபாஸ்டியனை. கடற்கரையின் ஓவென்ற சத்தம் ஒருபக்கம் நாடக கலைங்கர்களின் பாடல்கலுடன் கூடிய கணீர் கணீர் என்ற மேளசத்தம் ஒருபக்கம் என்று ஆலம்பரை அமைதி கொண்டிருக்க முருகனையும் செபாஸ்டியனையும் கண்டுகொள்ள யாருமில்லை அங்கு
அவர்கள் இருவரும் கட்டிபிடித்தபடி ஒரு ஒத்தயடிபாதை வழியே நடந்தனர் சிறிது தூரத்தில் சிலவீடுகளின் கொல்லைபுறம் தெரிந்தது அதுஒரு சிறியதெரு அதனை கடந்ததும் முருகனின் வீட்டுகொல்லை புறத்திற்கு வந்து சேர்ந்தனர் இருவரும். முருகனின் தாய் அண்ணன் அப்பன் என மூவரும் நாடகம் பார்க்க சென்றிருக்கும் இந்த தனிமையான தருனத்தை அழகாக பயன்படுத்தினான் முருகன்.
வீட்டுக்கு வாழவரும் மருமவப்பிள்ளை வாசவழியா வரணும்! நீ கொல்ல வழியா வார என்று மெலிதாக அலுத்து கொண்ட முருகன் உள்மாடத்தில் எரிந்து கொண்டிருந்த சிறிய அகல் தீபத்தை எடுத்து செபாஸ்டியனின் கைகளில் கொடுத்து இன்னொரு அறைக்குள் அழைத்து சென்றான். அகல் விளக்கின் சிறிய வெளிச்சத்தில் துணிசட்டம் ஒன்றில் வரையபட்டிருந்த மாரியம்மன் படத்திற்கு கீழே மஞ்சளில் வட்டம் எழுதி அதில் குங்கும பொட்டு இடப்பட்டிருப்பது தெரிந்தது.
அது என்வென்று கேட்ட செபாஸ்டியனுக்கு அதுதான் தங்கள் வீட்டு பூஜை அறை என்பதையும் வீட்டுக்கு மருமகளாய் வரும் பெண் திருமணம் முடிந்து இல்லத்திற்குள் முதன்முறையாக நுழைந்த உடன் இந்த அறைக்கு வந்து தீபமேற்றுவாள் இது எங்க சடங்கு என்று விளக்கிவிட்டு அர்த்த புஷ்டியாக செபாஸ்டியனை பார்த்தான் முருகன்.
                                 10
                           இடிமுழக்கம்
முருகனின் தேவை என்ன என்பதை உணர்ந்தவனாய் தன் கையிலிருக்கும் அகல் தீபத்தை கொண்டு அங்கு கீழே வைக்க பட்டிருக்கும் காமாட்சிவிளக்கை சுடரவிட்டான் செபாஸ்டின். அவன் ஏற்றிவைத்த தீபம் அந்த அறையில் வெளிச்ச ரேகைகளை பரப்பும் முன்னரே முருகனின் உள்ளத்தில் பாசரேகைகளை படரவிட்டுவிட்டது. அகல்விளக்கை கீழே வாங்கி வைத்த முருகன் தன் உடல்பலம் முழுவதையும் பிரயோகித்து தன்னை போன்றே ஆஜானுபாஹுவான உடற்கட்டு கொண்ட செபாஸ்டியனை தூக்கி கையில் ஏந்திகொண்டு இன்னொரு அறைக்குள் நுழைந்த வேகத்தில் பொட்டென்று அவனைவீசி எறிந்தான். எறிந்த வேகத்தில் தானும் ஏறி செபாஸ்டியனின் மீது வெறியோடு பாய்ந்தான். அது ஒரு பழைய தேக்குமரகட்டில்.
இருளை போர்வையாய் கொண்டு உடலில் உள்ள துணிகளை ஒவ்வொன்றாக இருவரும் கழட்டி வீச ஒவ்வொன்று திக்குக்கு ஒன்றாய் பறந்தது. காதல் கொண்டவர்கள் கட்டிலில் கிடந்தாலும் காட்டுக்குள் கிடந்தாலும் பாடாய் படுவது என்னவோ இதழ்கள்தான். முருகனின் வஜ்ரம் போன்ற பற்களில் செபாஸ்டியனின் சிவந்த உதடுகள் சிக்கி தவித்து சின்னாபின்னமாய் போய்கொண்டிருக்க மெலிதாக கைகள் அணைக்க கால்கள் பின்ன கோல்கள் உரச காமதேவனின் கோயில் கோபுரத்தின் உச்சிக்கு சென்றனர் இருவரும்.
காட்டுக்குள் மணற்பரப்பில் கிடந்தது இன்பம் துய்த்த பொழுதே காட்டற்று வெள்ளமாய் பொங்கியவர்களுக்கு கட்டில் ஒன்று கிடைக்கும் பொழுது சும்மாவா இருப்பார்கள். இடித்த இடியில் பிடித்த பிடியில் அய்யோ பாவிகளா என்னை விட்டு விடுங்களடா என் கால்கள் நான்கும் முறிந்து விடும் போலிருக்கிறது என்று கரக் மரக் என சப்தமிட்டது அந்த தேக்கு மரக்கட்டில்.
ஒருவழியாக அடித்து பிடித்து ஓய்ந்து போன இருவரது உயிர்நீரும் கண்ட இடத்தில் ஓடி கட்டிலின் மீது விரிக்க பட்டிருந்த மெல்லிய பஞ்சு மெத்தை நனைத்து எங்கு திரும்பினாலும் நசநச என்று பிசுபிசுத்த நேரத்தில் பிரான்ஸ் தேசத்திற்கு செல்லும் பொருட்டு இன்று மதியம் பெயரை பதிந்து கொண்டதாயும் கப்பலில் பயணித்து பிரான்ஸ் தேசத்தை அடைவதையும் அங்கு செபாஸ்டினும் முருகனும் காதல் புறாக்களாக சிறகடிக்க போவதையும் எண்ணி கனவு கொண்டிருந்த அந்த நேரத்தில் வானத்தின் கருமேகங்கள் அனைத்தும் திரண்டு வந்து இடியாய் இடிப்பது போல ஒரு கொட்டு சத்தம் மடார் மடார் என கேட்க்க துவங்கியது.
கோட்டையின் வாயிற்புரத்தில் இருபக்கமும்  ஆளுயர விட்டத்திற்கு அகலமாக இருக்கும் நகரா என்ற முரசு அரையப்பட்ட ஓசைதான் இடிபோல காதுகளில் ஒலிக்கிறது என்பதனை விளங்கிகொள்ள சிறிது நேரம் பிடித்தது முருகனுக்கும் செபாஸ்டினுக்கும்
என்ன இது? இத ஏன் இப்ப அடிக்கிறாங்க எதவது அவசர நிலை ஏற்பட்டத்தான் இதஅடிக்கணும் என்றபடி தத்தமது உடைகளை எடுத்து அணிந்து கொண்டு வாசல் வழியே வெளியேறினர் இருவரும். அந்த இரவு நேரத்தில் நாடகதாலாட்டில் அறிதுயில் கொண்டிருந்த ஆலம்பரை மக்கள்  அலங்கோலமாய் அங்கும் இங்குமாய் சிதறி ஓடிகொண்டிருந்தனர்.
அங்கு சிதறி ஓடும் பெரியவர் ஒருவரை நிறுத்தி என்ன விஷேசம் ஏன் இப்படி எல்லாம் ஓடுறீங்க என்று விசாரித்தான் முருகன்.
அதற்கு அந்த பெரியவர் பீரங்கி துப்பாக்கி வெள்ளபட்டணம் சண்ட சாவு என்ற ஒன்றுகொன்று தொடர்புடைய வார்த்தைகளை பொருந்தாத தாளத்தில் சொல்லியபடி ஓடினார். செபாஸ்டியனும் முருகனும் வேகமாக ஓடி கோட்டை வாசலை அடைந்தனர்.
அங்கு கோட்டை மதிலின் மீது வீரர்கள் அறக்கபறக்க துப்பாக்கிகளை ஏந்தியபடி நிற்க ஒருவன் சத்தமாக ஒரு செய்தி மடலை தமிழில் வாசித்து கொண்டிருந்தான். அதன் சாராம்சம் என்னவென்றால்
நமது ஆலம்பரை கோட்டையை கைப்பற்றும் நோக்கத்துடன் ஆங்கிலேயர்களின் பெரும்படை ஒன்று வெகுவேகமாக நம்மை நோக்கி விரைந்து கொண்டிருக்கிறது. அந்தபடை தற்போது மதராசிலிருந்து புறப்பட்டு காஞ்சிபுரம் வரை நெருங்கிவிட்டதாக தெரிகிறது அநேகமாக விடியும் நேரத்திற்குள் அவர்கள் நம்மை சுற்றி வளைக்கக்கூடும் என்பதால் கோட்டையை சேர்ந்த அனைத்து பணியாளர்களும் உடனடியாக கோட்டைக்குள் வரும்படி அழைக்கபடுகிறார்கள்.
இந்த அறிவிப்பினை அவன் திரும்ப திரும்ப வாசித்து கொண்டிருந்தான்.
பெரும்பாலான அரிசி வண்டிகள் மரக்கானத்து உப்புவண்டிகள் என ஏற்றுமதிக்கு இருந்த பொருட்கள் எல்லாம் கோட்டைக்குள் தஞ்சம் புகுந்து கொண்டிருக்கும் வேளையில் செபாஸ்டியனும் முருகனும் இந்த எதிர்பாராத சூழ்நிலையில் என்ன செய்வது என்று புரியாமல் திகைத்து நின்றனர். அந்த நேரத்தில் செபாஸ்டியன் உடனே கோட்டைக்குள் செல்லவில்லை என்றால் துப்பாக்கிக்கு இரையாக நேரிடும் என்று மேலேயிருந்து ஒரு பிரெஞ்சு வீரன் மிரட்டினான்.
அதனை கேட்ட செபாஸ்டியனுக்கு முருகனை விட்டு உள்ளே செல்ல மனம் இடங்கொடுக்க வில்லையாதலால் தவித்து போய்திகைத்து நின்றான் முருகனின் விழிகளை நோக்கி,
அதேநேரம் முருகனை தேடி அங்கும் இங்கும் அலைந்த முருகனின் குடும்பந்தார் அங்குவந்து சேரவே.. அவனை கொட்டைக்குல்செள்ளவேண்டாம் என்றும் சிதம்பரம் போய் இருந்துவிட்டு சில நாட்கள் கழித்து வரலாம் என்றும் அழைத்தனர்.
நான் நிச்சயம் கோட்டைக்குள் செல்ல வேண்டியது கட்டாயம் என்றும், ஆங்கிலேயர்கள் கோட்டையை கைபற்றத்தான் வருகிறார்கள் நமக்கு ஓன்றும் தீங்கு நேராது என்றும் நாளைகாலை வரை பொருத்து இருந்து பாருங்கள் சூழ்நிலைக்கு தக்கபடி யோசித்து சிதம்பரத்திற்கு நடையை காட்டுங்கள் என்வழியை நான் பார்த்து கொள்கிறேன் என்றும் முருகன் தன் குடும்பத்தார்க்கு பதில் கூறி செபாஸ்டியனை கைபிடித்து இழுத்து கொண்டு கோட்டைக்குள் சென்றோடி மறைந்தான்.
கோட்டைக்குள் இருப்பது தான் சிறந்த பாதுகாப்பு என்று எண்ணியவர்கள் கோட்டைக்குள்ளும், வெளியே இருப்பதே சாலசிறந்தது என்றெண்ணியவர்கள் வெளியேறிக்கொண்டும் இருக்க சிறிது நேரத்தில் அனைத்து தளவாடங்களையும் சேர்த்துகொண்டு கோட்டை கதவு படீர் என்று அறைந்து மூடப்பட்டது.
பணியாளர்கள் அனைவரும் ஒரு இடத்தில் அமர்ந்திருக்க பிரஞ்சு காவலர்கள் போர்புரிய தயாராக கவசஉடைகளை அணிந்து போர்த்தளவாடங்களை தாயர் நிலையில் வைத்து கொண்டிருந்தனர்.
காஞ்சிபுரம் மாமல்லபுரம் கடந்துவந்த ஆங்கிலேய்ர்கள் பொழுது விடியும் நேரத்தில் ஆலம்பரை கோட்டையினை முற்றுக்கை இட்டிருந்தனர். ஒரு பக்கம் கடல் இருக்க மற்றமூன்று பக்கம் கடல்போன்ற ஆங்கிலேய சேனைகள் பீரங்கிகளுடனும் துப்பக்கிகளுடனும் வாட்கள் குதிரைகள் யானைகளுடனும் பல்லாயிரக்கணக்காய் தாயர் நிலையில் இருந்தனர்.
ஆலம்பரை கோட்டையின் வாழ்நாளில் சிவப்பு சரித்திரமாய் இருக்க போகும் அந்த நாளை ஆவலோடு காண காலைசூரியன் வெளிப்பட்டான்.
ஆங்கிலேய தளபதி ஒருதுணியில் கடிதம் ஓன்றை எழுதி அம்பு அன்றில் கட்டி கோட்டையின் மையத்தை நோக்கி விடச்செய்தான்.

                                          -அடுத்த பதிவில் நிறையும்

ஆலம்பரை கோட்டை - ஓரினக்காதல் தொடர்கதை1




கதையில் வரும் பாத்திரங்கள் சம்பவங்கள் முழுதும் கற்பனையே!!
                                                                                01
                                                                தோணித்துறை
கிழக்கு கடற்கரைச்சாலையில் புதுவை செல்லும்போது மரக்காணத்துக்கு முன்பு உள்ள சிற்றூர் கடப்பாக்கம். இங்கிருந்து கடலை நோக்கி மூன்று மைல்கள் சென்றால் எடுத்த எடுப்பிலேயே கண்களில் படுவது பாழ்பட்டு போன பெரியபெரிய செங்கல் சுவர்கள்தான். ஆலம்பரை கோட்டை என்ற பெயர் தாங்கி கிபி பதினேழாம் நூன்றாண்டின் இறுதிவாக்கில் செல்வாக்குடன் இருந்த இவ்விடம் இன்று வெறும் செங்கல் மேடாக கடலோரத்தில் காட்சியளிக்கிறது. நீங்கள் காணும் செங்கல் சுவர்களை நினைத்தபடி கண்களை மூடுங்கள் உங்களை சில நூற்றாண்டுகள் பின்னோக்கி அழைத்து சென்று மனதை கனக்க செய்யும் ஓரினக்காதல் கதை ஒன்றை கண்முன் கொடுக்கிறேன்.
கிபி பதினேழாம் நூற்றாண்டின் ஒரு காலைநேரத்தில் கடலின் உப்புக்காற்று கொல்லைபுறமாக வீட்டுக்குள் புகுந்து முத்தம்மாளை உசுப்பி பொழுது விடியப்போகிறது உன்மகனை எழுப்பிவிடு என்றது.  அதே நேரம் ஆலம்பாறை கோட்டையின் மீதிருந்த மணிக்கூண்டில் ஐந்தாம் மணி ஒலிக்கவே முத்தம்மாள் எழுந்து சென்று மாமரத்தடியில் படுத்திருக்கும் தன் மகனை எழுப்பினாள்.
போர்வைக்குள் இருந்த ஆஜானுபாகுவான உருவம் மெலிதான முனகலுடன் அசைந்து கொடுத்தது. முத்தம்மாள் நிமிர்ந்து வீட்டின் பின்புறம் பார்த்தாள். அரைகுறையாக புலர்ந்து கொண்டிருக்கும் வெளிச்சத்தில் ஆலம்பரை கோட்டை மதிலின் மீது ஏற்றி வைக்கப்பட்டிருந்த தீப்பந்தங்களை தமிழ்நாட்டு பணியாட்கள் அணைப்பதும் அதனை அருகில் நின்று பிரெஞ்சு வீரர்கள் வேடிக்கை பார்ப்பதும் தெரிந்தது. வீரர்களின் அலட்சிய நடத்தையில் இருந்து பெரிய துரை இன்னும் எழுந்திருக்கவில்லை என்று முத்தம்மாள் உணர்ந்து கொண்டு மகனை எழும்படி துரித படுத்தினாள்.
ம்மா!! ஏம்மா காலையிலேயே காச் மூச்ன்னு காதுகிட்ட வந்து கத்துற? பெரியதொர சூரியன் கெளம்புன பெறவுதான் எந்த்ரிப்பார்!! என்றான் போர்வைக்குள் இருந்த முருகன் என்கிற திருமுருகன்.
“அது சரிதாண்டா நீ வேலைக்கு கெளம்ப இன்னும் நேரம் இருக்கு ஆனா உங்கப்பாரு காலையிலேயே தோனிக்கு போய்ட்டாருடா, பாவம் மனுஷன் பச்சத்தண்ணி கூட குடிக்கல, கொஞ்சம் கேப்ப கூழு கரச்சி வச்சிருக்கேன் போய் கொடுத்துட்டு வாடாஎன்றாள் அம்மா
“என்னா இன்னிக்கி காலம்பரையே போய்ட்டு? போர்வையை விலக்கி கேட்டான் முருகன்.
“தொரைக்கு தூக்கம் வந்தா ஒலகமே மறந்துடுமா? காரைக்கால் லருந்து சிப்பாயி கப்பல் வருதே மறந்துட்டியா? என்று சொல்லியபடி அந்த அம்மாள் எழுந்து உள்ளே போய்விட்டாள்.
முருகனுக்கு பிறகுதான் நினைவுக்கு வந்தது எல்லாம், போர்வையை முழுமையாக அப்புறப்படுத்தி தன் உறுதியான நீண்ட கால்களை தரையில் ஊன்றி எழுந்தான். கொசகொசவென சுருட்டை முடி நிறைந்த அவனது கால்களில் ஒன்றில் வெள்ளி கழல் அணிந்திருந்தது முருகனுக்கு கம்பீரமாக இருந்தது. இயல்பாகவே உருள் திரளாய் இருக்கும் அவனது கறுத்த உடல் இருபது வயது இளமையோடு காண்பவர் நெஞ்சை கொள்ளை கொள்ளும்படி செழித்து கிடந்தது. அவிழ்ந்துகிடந்த சுருட்டை தலைமுடியை பின்கட்டாக அள்ளி முடிந்து இடுப்பு வேட்டியை இறுக்கி கட்டி கொண்டு முகம் கழுவி கூழ் வாளியை எடுத்து கோட்டையின் கீழ்ப்புறம் இருக்கும் தோணித்துறைக்கு நடைப்போட்டான முருகன்.
அவன் தோணித்துறைக்கு செல்வதற்குள் ஒரு சிறு விளக்கம் கொடுத்து விடுகிறேன். சற்றேறக்குறைய கிபி 1600 களில் இந்தியா முகலாயர்களின் ஆட்சியில் இருந்த பொழுது ஒரு மொகலாய மன்னரால் கட்டப்பட்டது இந்த ஆலம்பரை கோட்டை என்பது. வங்கக்கடலில் இயற்கையாக துறைமுகம் போன்று அமைந்த இந்த கடற்கரையில் சங்ககால தமிழர்கள் கூட ரோமாபுரியுடன் கப்பல் போக்குவரத்தில் ஈடுபட்டதற்கான சான்றுகள் உள்ளனவாம். ஏற்கனவே துறைமுக பட்டினமாக இருந்த இடத்தில் ஒரு விரிவுபடுத்த பட்ட தோணித்துறையுடன் முழுவதுமே செங்கல்லால் ஆன ஒரு வியாபார தளமாக இந்த கோட்டையை அந்த மன்னர் கட்டியுள்ளார். பிற்காலத்தில் இந்திய துணைகண்டம் பலவேறு ஐரோப்பியர்களான டச்சுக்காரர்கள், பிரெஞ்சுக்காரர்கள், ஆங்கிலேயர்கள் போன்றவர்களின் ஆக்கிரமிப்புக்கு உட்பட்டிருந்த நாட்களில் காரைக்காலும் பாண்டிச்சேரியும் அதன் சுற்று பகுதிகளும் பிரெஞ்சுக்காரர்கள் ஆளுகையில் இருந்தது. இந்நாட்களில் இக்கோட்டையை ஆண்டு கொண்டிருந்த சுபேதார் முசாபர்ஜங் என்பவர் பிரஞ்சு தளபதியான டூப்ளே தனக்களித்த உதவிக்கு நன்றியாக பிரெஞ்சுக்காரர்களுக்கே ஆலம்பரை கோட்டையை அன்பளிப்பாக வழங்கிவிட்டு சென்று விட்டார். அதுமுதல் பிரெஞ்சு வர்த்தகர்களும், ஆட்சியாளர்களும் கோட்டை மற்றும் அதன் சுற்று பகுதியையும் ஆட்சி செய்து வருகின்றனர். வெற்றிலை, புகையிலை, காஞ்சிப்பட்டு, அரிசி, காய்கறிகள், போன்ற பலதரபட்ட பொருட்களும் இங்கிருந்து பிரெஞ்சு வணிகர்களின் மூலம் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்த வணிகத்தையும் வரிவசூல் நிர்வாகத்தையும் கவனிக்க பிரெஞ்சு நிர்வாகம் நியமித்துள்ள சர் மைக்கேல் டிசோசா என்பவனைத்தான் முத்தம்மாளும் முருகனும் முன்பு பெரியதுரை என்று அழைக்கக்கண்டோம்.
இந்த பெரியதுரை என்பவன் கொஞ்சம் கடுமையான குணம் கொண்டவன். இவன் அவ்வளவாக தமிழர்களை நம்புவது இல்லை எனவே கோட்டையின் பராமரிப்பு, மற்றும் எடுபிடி வேலைகளுக்கு தமிழர்களையும் காவல் மற்றும் சமயல் வேலைகளுக்கு பிரெஞ்சு ஆட்களையும் அமர்த்தி கொண்டிருக்கிறான். அவ்வகையில் பெரியதுரையின் சேவகர்களில் ஒருவன்தான் நமது முருகன். காலையில் டிசோசா எழுந்து குளித்து உடை மாற்றி உண்டு வெளியேறும் வரை முருகன் குழுவினரின் ஒத்துழைப்பு இன்றியமையாது. இன்பமே வாழ்வாய் இருந்த துரையின் நாட்களில் சிலகாலமாக பயம் கூடிவிட்டது காரணம் சென்ற மாதம் ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனியாரிடம் இருந்து வந்த ஒரு கடிதம்.
அதன் சாராம்சம் என்னவென்றால்: கூடிய சீக்கிரம் பிரெஞ்சுக்காரர்கள் ஆலம்பரை கோட்டையை ஆங்கிலேயர்களிடம் கொடுத்துவிட்டு அங்கிருந்து வெளியேறி விடவேண்டியது. இதனை எதிர்க்கும் பட்சத்தில் பீரங்கி மற்றும் துப்பாக்கியின் உதவியுடன் வலுகட்டயாமாக கோட்டை கைப்பற்றப்படும் என்பதாகும்.
டிசோசா மேலிடத்துக்கு இதனை தெரிய படுத்திய பொழுது அங்கிருந்து வந்த பதிலின் சாராம்சம்: திரு மைக்கேல் டிசோசா கலெக்டர் அவர்கள் ஆங்கிலேயரின் வெற்றுகூச்சல்களுக்கு ஒன்னும் பயப்படவேண்டியது இல்லை. காரைக்காலில் இருந்து கப்பல் மூலம் நமது துருப்புக்கள் அங்கு தருவிக்கபடுவார்கள். ஏறக்குறைய ஆயிரம் வீரர்களும் அவர்களுக்கு தேவையான தளவாடங்களும் அனுப்புகிறோம் அவர்களைக் கொண்டு கோட்டை காவலை பலபடுத்தி வாணிபத்தை கவனிக்க வேண்டுகிறோம் என்பதாகும்.
மேற்கண்ட வீரர்களை தாங்கி வந்த கப்பல் ஆலம்பரைக்கு கிழக்கே வங்ககடலில் நங்கூரம் பாய்ச்சி கிடக்க வீரர்களை கப்பலில் இருந்து கோட்டைக்கு தருவிக்கவே நமது முருகனின் தந்தையான சோனப்பன் தோணித்துறைக்கு சென்றிருப்பதையும் அவருக்கு கூழ் கொடுக்க நம் முருகன் சென்றிருபத்தையும் நாம் ஏற்கனவே பார்த்திருக்கிறோம். சரி வாருங்கள் முருகன் என்ன செய்கிறான் என்று பார்ப்போம்
                              02
                                                                     பேரழகன்
                          
முருகன் அங்கு செல்வதற்கு முன்பே கப்பலில் இருந்து படகுமூலம் கரையை அடைந்த பிரெஞ்சு வீரர்கள் பலர் குழுமி இருந்தனர். கடலில் இருந்து கிளைத்து வந்த நீண்ட வாய்க்கால் போன்ற அமைப்பில் படகுகள் வந்துசெல்ல பொருட்கள் ஏற்றிஇறக்க எதுவாக தளம் அமைக்க பட்டிருந்தது. ஒரு படகு கடலுக்குள் செல்ல தயாராக இருந்த நிலையில் ஒரு படகு வந்து கொண்டிருந்தது, படகோட்டி ஒருவரிடம் தன் தந்தை குறித்து கேட்ட முருகனுக்கு அவர் கடலினுள் சென்று இருப்பதாக தகவல் கிடைக்கவே அவன் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை உண்டாகி விட்டது.
“சரி நிக்கிற நேரத்துல புதுசா வந்துருக்க வெள்ளகாரனுங்க எப்டி இருக்காணுங்கன்னு பாப்போம் என்று நினைத்தவாறே அங்கு வந்து இறங்கியுள்ள பிரெஞ்சு சிப்பாய்களின் மீது கண்களை ஓட விட்டான் முருகன். பொதுவாக முருகனுக்கு பிரெஞ்சுகாரர்களை பிடிப்பது இல்லை, “ஆமா அவனுங்க வெள்ள தோலும் பூனைகண்ணும் என்று அலுத்து கொள்வான்.
கோட்டை காவலில் ஈடுபடுகிற பிராங்க்ளின் என்னும் பிரெஞ்சுக்காரன் கூட முருகனை கண்டாலே வழிந்து கொண்டு வருவான். முருகன் ஆண்களையே எப்பொழுதும் உற்றுபார்ப்பதை தெரிந்து கொண்டானா என்னவென்று தெரியவில்லை ஒருமுறை முருகனிடம் நேரடியாகவே உறவுக்கு வரும்படி கேட்டுவிட்டான். ஆனால் முருகனுக்கு வெள்ளைத்தோல் பூனைகண்ணை நினைத்தாலே வேப்பங்ககொழுந்தாய் இருப்பதால் இதுவரை அவனை தவிர்த்து வருகிறான். அந்த பிராங்க்ளினும் முருகனை இன்னும் துரத்திவருகிறான் என்பது வேறு கதை.
ஏற்கனவே காரைக்காலில் தங்கி இருந்ததாலோ என்னவோ அந்த சிப்பாய் கூட்டத்தில் கொச்சையாக பல தமிழ் வார்த்தைகள் பயன்பட்டு கொண்டிருந்தது. மேலோட்டமாக பார்த்து கொண்டிருந்த முருகனை ஒரு வீரன் மட்டும் கண்கொட்டாமல் பார்த்து கொண்டிருந்ததை முருகன் பிறகுதான் புரிந்து கொண்டான். ஒருகணம் அந்த பிரெஞ்சு வீரனும் முருகனும் நேருக்குநேர் பார்த்து கொண்டனர். அந்த பிரெஞ்சு காரனின் உற்றுநோக்கல் முருகனை என்னவோ செய்வது போல இருந்தது. மற்ற வீரர்களை போல இல்லாமல் சற்றே கூடுதல் உயரத்துடனும் ராணுவ சீருடையில் கட்டிலங்காளையாகவும் தெரிந்த அந்த வீரனின் தலை முடி செம்பட்டையாக இல்லாமல் கருமையாக இருந்தது கண்கள் பூனை போல பச்சையாக இல்லாமல் பழுப்பு நிறத்தில் இருந்தது. முதன் முறையாக ஒரு வெள்ளைத்தோல் வீரனை இத்துணை நேரம் வாஞ்சையுடன் முருகன் பார்த்து கொண்டிருப்பது நிச்சயம் ஆச்சர்யம்தான். அந்த வீரனும் முருகனின் மீது கூடுதல் கவனம் செலுத்தாமல் இல்லை.. நண்பர்களுடன் பேசுவது போல முருகனையும் பார்த்து கொண்டிருந்தான் அந்த வீரன். பிறகு முருகனிடம் ஏதோ பேச எண்ணியவன் போல கூட்டத்தில்ஹ சற்றே முன்னோக்கி நகர முற்பட்டான் அதற்குள் அந்த சிப்பாய் கூட்டம் மெல்ல கோட்டை நோக்கி நகர துவங்கவே அந்த பிரெஞ்சுக்காரனும் முருகனிடம் கண்களால் விடைபெற்று நடக்கலானான்.

தோனித்துறையில் இருந்து வீட்டுக்கு வந்து பாதுகாப்பு சோதனைகளை கடந்து முருகன் கோட்டைக்குள் சென்ற பொழுது நடுமுற்ற மைதானத்தில் புதிய பிரெஞ்சு வீரர்கள் அணிவகுத்து நின்றிருந்தனர்.  வித்யாசமான தலைதொப்பி தொடைவரை நீண்டிருக்கும் சிவப்பு அங்கி சந்தனநிற கால்குழாய் என நின்றிருந்த வீரர்களின் நடுவே காலையில் தோணித்துறையில் சந்தித்த வீரன் நிற்கிறானா? என்று ஓரக்கண்ணால் பார்த்தபடியே அணிவகுப்பை கடந்து பெரியதுரையின் அறையை நெருங்கினான் முருகன்.

காலை சூரியன் ஒருபனை அளவு உயர்ந்து விட்ட நேரத்தில் பெரியதுரையின் அறைவாசலில் தமிழக தவில் நாதஸ்வர கலைஞர்கள் விடிகாலை நேரத்தில் வாசிக்கும் பூபாலத்தை கொண்டு துரையின் தூக்கத்தை கலைக்க முயன்று கொண்டிருந்தனர். அவர்களை கடந்து முருகன் உள்ளே சென்ற பொழுது துரையின் கட்டிலை சுற்றி முருகனின் சகபணியாளர்கள் மூவரும் கைகட்டி தலை குனிந்து டிசோசாவின் அருகே நின்று கொண்டிருந்தனர்.

கோட்டையின் மணிக்கூண்டு எட்டு மணிகளை அடித்து ஓய்ந்த பிறகு போர்வையை விலக்கி எழுந்த டிசோசா கண்களை துடைத்து முருகன் உள்ளிட்டோரின் பணிவிடையில் குளித்து முடித்து புதிய உடைக்குள் புகுந்து அரைமணி நேரத்தில் அணிவகுப்பை பார்வையிடும் பலகனி முற்றத்திற்கு வந்தான்.

அருகிலேயே அவனுக்கு தேவையான உதவி பொருட்களை எடுத்துகொண்டு முருகன் உள்ளிட்டோரும் நின்றனர்.

கோட்டைகாவல் தளபதி தாமஸ்காலிஸ் என்பவன் காரைக்காலில் இருந்து வந்திருக்கும் வீரர்களை பற்றி டிசோசாவுக்கு விளக்கினான். பேண்டுவாத்தியம் முழங்க ஆயிரம் வீரர்களும் நூறுநூறாக அணிவகுத்து வந்து டிசோசாவுக்கு வணக்கம் வைத்தனர். ஒவ்வொரு அணிவகுப்பிலும் ஒரு தலைமை வீரன் முதலாவதாக வந்தான்.

துரைக்கு அருகிலிருப்பத்தால் அணிவகுத்த வீரர்களை வெகுஅருகில் பார்க்க முடிந்தது முருகனால். ஐந்தாம் பிரிவு வீரர்கள் வரும் பொழுது முருகனை காலையில் பார்த்து பேசத்துடித்த அந்த பிரெஞ்சு வீரனான செபாஸ்டின் டைட்ரஸ் எனும் நம் கதையின் நாயகன் தலைமை தாங்கி வந்தான்.

இதுவரை துரையை கடந்த வீரர்கள் அனைவரும் வேறுபக்கம் திரும்பாமல் நேர்பார்வையோடு சென்றார்கள். இந்த செபாஸ்டியன் மட்டும் துரைக்கு வணக்கம் வைத்து விட்டு நகர்ந்த உடன் அருகில் நின்றிருந்த முருகனை பார்த்து யாருமறியாமல் கண்ணடித்து விட்டு திரும்பினான்.

அனைவரின் கவனமும் அணிவகுப்பில் இருக்க முருகன் மட்டும் செபாஸ்டியனை கவனிக்க அவன் சற்றும் எதிர்பாரா வண்ணம் கண்ணடித்ததில் திடுக்கிட்டு போய் சமாளித்து நின்றான் முருகன்.

செபாஸ்டின் குழுவினர் உரிய இடத்தில் போய் நின்றதும் குழு தலைவனான செபாஸ்டியன் துரையை நோக்கி இருப்பதுபோல் முருகன் என்னும் தமிழனின் ஆண்மையை கண்களால் பருக துவங்கினான்.

சிவப்புநிற துணியில் காதுகளுக்கு மேல் தலைப்பாகை கட்டியிருந்த முருகன் தனது சுருட்டை முடியை பின்பக்கம் அழகாக விரிந்த படி சீவி விட்டிருந்தான். கிராப் வெட்டிக்கொள்ளும் பிரெஞ்சுக்காரனான செபாஸ்டினுக்கு தோளில் படர்ந்த முருகனின் நீண்ட சுருட்டை முடியழகும். வெண்ணிற திருநீறு கொண்டு மூன்று கோடுகள் நெற்றியில் வரைந்திருக்கும் விதமும் அளவாக முறுக்கி விடப்பட்ட மீசையும், கட்டிளங்காளை போன்ற முருகனின் கறுத்த மேனியும் இதுவரை தமிழ்நாட்டில் கண்ட ஆண்களிலேயே இவன்தான் பேரழகன் என்று தோன்ற வைத்தது. 
                                                                             03
                                                தனியறையில் இருவர்                                 
வெள்ளைவெளேர் எனத்தோலும் செம்பட்டை மயிரும் வத்தி போன தேகமுமாக இருக்கும் பிரெஞ்சு வீரர்களுக்கு நடுவே செபாஸ்டின் மட்டும் கறுத்த மயிரும் திமிறிய புஜங்களும், வித்யாசமான குறுந்தாடியுமாய் தேவலோக சுந்தரானாக காட்சியளித்தான் முருகனுக்கு.

அணிவகுப்பு சடங்குகள் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கும் இந்நேரத்தில் முருகனும் செபாஸ்டினும் கண்களால் காமம் பரிமாறி முடிப்பதற்குள் செபாஸ்டின் பற்றி சிறு விளக்கம் கொடுத்து விடுகிறேன்.

பிரான்ஸ் நாட்டில் ஒரு புத்தகக்கடை நடத்தி வந்த அன்னாலூசி என்ற பெண்மணிக்கும் அரபுநாட்டு யவனன் ஒருவனுக்கும் இருபத்தி மூன்று ஆண்டுகளுக்கு முன்பு காதல் மலர்ந்த காரணத்தால் அராபியபிரெஞ்சு கலப்பாக ஒரு ஆண்குழந்தை பிறக்க இருந்த தருணத்தில் அந்த அராபியன், லூசியை ஏமாற்றிவிட்டு அரபுநாட்டுக்கு திரும்பிவிட்டான்.

அதை பற்றி ஒன்றும் கவலைப்படாத அந்த அம்மையார் தனக்கு பிறந்த குழந்தைக்கு செபாஸ்டியன் டைட்ரஸ்  என்று பெயரிட்டு தன் புத்தகக்கடை வேலைகளை கற்று தந்துகொண்டே இன்னொரு பிரெஞ்சுகாரனை காதலித்து வந்தார்.

செபாஸ்டினுக்கு வயது பதினெட்டை தாண்டும் பொழுது அந்த அம்மையார் மகனிடம் கூறியதாவது:

என்மகனே நீ எத்தனை நாள்தான் வாழ்க்கையில் ஒன்டிகட்டையாக இருப்பாய்? உனக்கு ஒரு தம்பியோ தங்கையோ வேண்டியது அவசியமாகிறது, எனவே எனது காதலர் திரு மார்டீனை திருமணம் செய்து கொண்டு அவரது வீட்டுக்கே சென்று விடுவது என முடிவு செய்துள்ளேன். உனக்காக நான் விட்டு செல்லும் இந்த புத்தக கடையை மூலதனமாக வைத்து உன்வாழ்க்கையை தொடங்கு.

அந்த நாட்டு கலாச்சாரத்தில் இதுஒன்றும் பெரியவிஷயமாக இல்லாததால் செபாஸ்டீனும் இதனை சாதாரணமாக எடுத்து கொண்டு இரண்டு ஆண்டுகள் வாழ்கையை நடத்தி வந்தான்,

மற்ற ஆண்களை போல பெண்களின் மீது நாட்டம் கொண்டவனாக இருந்திருந்தால இந்நேரம் ஒரு பெண்ணை காதலித்து குடும்பஸ்தனாகி இருப்பான் ஆனால் செபாஸ்டின்தான் நம் இனமாயிற்றே!!

தற்போது உள்ளது போல் மூன்று நூற்றாண்டுகளுக்கு முன் ஆண்கள் சேர்ந்து குடும்பம் நடத்துவது பெரிதாக இல்லையாதலால் வாழ்கையை வெறுமையாக ஒட்டிவந்த செபாஸ்டீன் தன் புத்தகக்கடையை விற்றுவிட்டு இந்தியாவில் உள்ள பிரெஞ்சு ஆட்சிபகுதிகள் மற்றும் வாணிப தளங்களுக்கான பாதுகாப்பு படையில் சேர்ந்து கிழக்கு நோக்கி கப்பலில் பயணமாகி காரைக்காலில் வந்து இறங்கினான்.

காரைக்காலில் இது போன்ற கோட்டை கொத்தளங்கள் இல்லாததால் சாதாரண நகரகாவல் பணியில் இருந்தான் அவன்.

மக்கள் தொடர்பு அதிகம் உண்டானதால் தமிழ் மொழி பேசவும் புரிந்துகொள்ளவும் கற்றுகொண்டான். பதினெட்டு வயது ஆண்மகனை விட்டு புருஷனோடு சென்ற தன் தாயையும் சாகும் வரை குழந்தைகளும் பெற்றவர்களும் ஒன்றாக குடும்பமாக வாழும் தமிழ் குடும்பங்களையும் தாய்மார்களையும் ஒப்பிட்டு பார்த்து வியந்துபோனான் செபாஸ்டின்.

காரைக்காலில் நடத்தப்பட்ட மாங்கனி திருவிழாவில் மாங்கனிகள் வாரி இறைக்கப்படுவதை கண்டும் காரைக்கால் அம்மையாரின் கதையையும் தமிழக மக்களின் பண்பாட்டையும் பெரிதும் விரும்பிய நிலையில்தான் ஆலம்பரை கோட்டைக்கு இடமாற்றமாகி உள்ளான் செபாஸ்டின்.

சரி வாருங்கள் கதையில் தொடர்ந்து என்ன நடக்கிறது என்று பார்ப்போம்.

அணிவகுப்பு திடலில் நம் நாயகர்கள் இருவரும் கண்களால் காமதாகம் பரிமாறிகொண்ட நிலையில் அணிவகுப்பு முடிந்து வீரர்கள் கோட்டையின் பல பகுதிகளுக்கும் காவலுக்காக நிறுத்த பட்டனர்.

ஒவ்வொரு நூறு வீரர்களின் தலைமை வீரர்கள் மட்டும் தனிப்பட்ட முறையில் டிசோசாவை சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. டிசோசா தன் அறைக்குள் ஒவ்வொரு வீரனாக வரவழைத்து வழங்கு பத்திரங்கள் போன்றவற்றை சோதனை இட்டு பிரெஞ்சு மொழியில் பேசிக்கொண்டிருந்தான

அருகில் முருகனும் இன்னொரு பணியாளனும் அறையை ஒழுங்கு படுத்தி கொண்டிருந்தனர். தலைமை வீரர்கள் வயது மூப்பு அடிப்படையில் டிசொசாவை பார்த்ததால் செபாஸ்டீன் கடைசி ஆளாக உள்ளே நுழைந்து சல்யூட் அடித்து நின்ற பொழுது, முருகனின் சகபணியாளனை அழைத்து டீ எடுத்து வர  சொல்லி அனுப்பி விட்டு செபாஸ்டீனை நோக்கி சிறிது நேரம் காத்திருக்கும் படி பணித்து கழிவறைக்குள் எழுந்து சென்றான் டிசோசா.

முருகனும் செபாஸ்டினும் முதல்முறையாக தனிமையில் இருக்கும் சூழல் தற்செயலாக உண்டானது.
இருவருமே சற்றும் எதிர்பார்க்காத இந்த சூழலில் என்ன செய்வது என்று புரியாமல் நேருக்கு நேர் பார்த்து கொண்டிருந்தனர்.

 முருகனை பார்த்து செபஸ்டியன் புன்னகைக்க முயன்றான். முருகனுக்கு செபாஸ்டீனின் கட்டழகையும் மிடுக்கான பிரெஞ்சு சீருடையும் பார்த்து மெலிதான காமம் தலைக்கேற அவன் குனிந்து கொண்டான். அதிகார நிலையிலிருப்பதால் கூச்சமின்றி பேச்சை துவங்கினான் செபாஸ்டீன்.

என் பேர் செபாஸ்டின் டைட்ரஸ் உன் பேர் என்னா? என்று கொஞ்சும் தமிழில் கொச்சையாக கேட்டு கைக்குலுக்க முன்வந்தான்.

எப்பொழுதும் அதிகாரமாக பேசும் பிரெஞ்சு வீர்களின் மத்தியில் செபாஸ்டின் தன்னை அறிமுக படுத்தி நட்பு ரீதியில் பேசவருவது முருகனுக்கு வியப்பாக இருந்ததை விட அவன் தெளிவாக தமிழில் பேசுவது கூடுதல் மயக்கத்தை கொடுத்தது.

தட்டுத்தடுமாறி சமாளித்து முருகன் என்று அறிமுகப்படுத்தி கொண்டவனை செபஸ்டீனின் பிரகாசமான முகமும் வித்தியாசமான தாடியும் பாடாய் படுத்தியது. அடுத்தவார்த்தை பேசுவதற்கு இருவரும் முயற்சிக்கும் நொடியில் கழிவறைக் கதவை திறந்து கொண்டு டிசோசா வௌியேறினான்.

                           04
                                                                கடற்கரையில்
தொடர்ந்து நடந்த சம்பிரதாய நிகழ்வுகளை முடித்து கொண்டு செபாஸ்ட்டீன் அறையை விட்டு வௌியேறும் போது முருகனை ஒரு ஏக்கப்பார்வை பார்த்து சென்றான். இனி உன்னை எப்பொழுது பார்ப்பேன் என்பதுபோன்ற ஆயிரம் கேள்விகள் அந்த பார்வையில் இருந்தது முருகனுக்கு புரியாமலில்லை.

அன்று மாலை கோட்டைப்பணிகளை முடித்து கொண்டு வீடுதிறும்பிய  முருகனுக்கு அவனது தாய் இரவு உணவுதனை எடுத்து வைத்தாள்.

கட்டுக்கடங்காத காமம் அவனை உணவிலிருந்து திசைதிருப்பியது. மீண்டும் மீண்டும் செபாஸ்டீனின் அழகிய உருவமும் திமிறிய புஜங்களும் கண்முன் வந்தது. செபாஸ்டீன் தூண்டிவிட்ட காமத்தீயை கை கொண்டு அணைக்கலாம் என கடற்கரையை நோக்கி நடந்தான் முருகன்.

வளர்பிறை சதுர்த்தசி நிலவானது கடலில் அலையெழும்புவதை தௌிவாகாக் காட்டியது. ஆள்நடமாட்டம் மிகுந்த  பகுதியை தவிர்த்து இடதுபுறம் இருக்கும் மீனவர் குடியிருப்புகளை கடந்து புன்னை மரம் நிறைந்த பகுதிக்கு சென்ற முருகனுக்கு ஓர் உருவம் கடலைநோக்கி மணலில் அமர்ந்திருப்பது தெரிந்தது.

இதே நேரத்தில் ஆளரவம் இன்றி இருக்கும் இடத்தில் இப்படியொரு உருவம் முருகனை அதிசயிக்க வைத்தது.  நிச்சயம் ஊர்காரர்கள் எவரும் இங்கு வந்து அமர வாய்ப்பு இல்லை என்பதை உணர்ந்து அருகில் கிடந்த நீண்ட மூங்கில் குச்சியை கையில் எடுத்து கொண்டு யாரது? என்று அதட்டினான்! முருகன்

அதிர்ச்சியடைந்த அந்த உருவம் திடுக்கிட்டு எழுந்தது.  அது அனிந்திருந்த  உடையில் இருந்து அவன் ஒரு பிரெஞ்சு வீரன் என்பதை உறுதி படுத்திக்கொண்டு தடியை கீழே போட்டு விட்டு மேலும் நெருங்கிய போது நிலவின் ஒளி அந்த உருவம் செபாஸ்டின் என்று காட்டியது முருகனுக்கு.
நான் செபாஸ்டின் என்றான் அவன்

என்னாது செம்பாட்டியா?? பாம்பாட்டிதான் தெரியும் எனக்கு என்று தன்பாணியில் நக்கலடித்தான் முருகன்.

வந்திருப்பது முருகன்தான் என்பதை அறிந்து கொண்ட செபாஸ்டீன் ஆச்சர்யக்கடலில் மிதந்து போனான்.
பாம்பாட்டியில்ல செபாஸடீன்என்றவன் என்ன இங்க பன்ற? என்று வித்தியாச தமிழில் வினவினான்.

அதநான் கேக்கனும் தொர நீ என்ன இங்க உக்காந்துருக்க ? என்று கேட்டான் முருகன்.

வேலை முடிஞ்சிட்டு மனசு கஷ்ட்டம் தனியா வந்துட்டன். நீ என்னை செபாஸ்டின்னு கூப்டு துரை னு கூப்டாத என்றான் அவன்.

மகிழ்ந்த முருகன் சரி உக்காரு செம்பு உக்காந்து பேசுவோம் என்றபடி உரிமையோடு அவனது கரத்தைபற்றி இழுத்து அமர்த்திக் கொண்டான். செபாஸ்டீனின் இதயம் முழுவேகத்தில் இரத்தத்தை சகல பாகங்களுக்கும் பாய்ச்ச எழுவேண்டிய பாகங்களை தூண்டி விட்டது.
பெரும்பாலும் பிரெஞ்சுகாரர்களை வேற்றுமையுடன் பார்கும் தமிழக இளைஞகர்களின் மத்தியில் தன் மனம் கவர்ந்த முருகனே இப்படி நடப்பது செபாஸ்டீனுக்கு காமத்தை கிளர்ந்தது.

எந்த கேள்வியும் கேட்க்காமல் முருகனின் வெற்று தோளில் கையை போட்டான செபாஸ்டீன். முருகனின் தலைமுடியில் இருந்து வந்த சீயக்காய் வாசனை செபாஸ்டீனை நான் உனக்குதான் அள்ளிக்கோ அள்ளிக்கோ என்றது.

கையை துணைக்கொள்ள வந்தவனுக்கு கடடிளங்காளை ஒன்றின் அனைப்பு கிட்டும் போது கசக்கவாசெய்யும் லீலைகளை அவனே துவங்கட்டும் என்று காத்திருந்தான் முருகன்.
செபாஸ்டீனின்  வாய் எதையோ பேசவும் கை எதையோ தீண்டவும் போராட கடைசியில் கையே வெற்றி பெற்று முருகனின் தோளை வாஞ்சையுடன் அழுத்தியது. முருகன் மெலிதாக செபாஸ்டினின் தொடை மீது  கைவைத்து அழுத்தினான்.

கனன்று கொண்டிருந்த காமதீபம் கட்டுககடங்காத காட்டுத்தீயாக பெருக்கெடுக்க  மணல்வௌியை படுக்கையாக்கி கடலை சாட்சியாக்கி தங்கள் காதல் காவியத்தின் முதல் அத்தியாயத்தை எழுதத்துவங்கினர் முருகனும் செபாஸ்டனும்.
இயங்கி முடித்த வேகத்தில் வியர்வை வழிந்து ஓடியது இருவர் தேகத்திலும் அணைத்தபடி நிலவை நோக்கி கிடந்தனர் 

மூச்சின்  சூடும் அணைப்பில் இருந்த அன்பும் அவர்களை காலம் எல்லை இல்லாத பிரபஞ்ச விளிப்பில் கொண்டு சேர்த்தது.

நேரத்தை அறியாமல் வாய்மொழி பேசாமல் காமத்தீயின் உதவி கொண்டு காதல் தீபம ஏற்ற இருக்கும் இருவரையும் தேடிக்கொண்டு கடற்கரையில் ஆட்கள் அலைவது அறியாமல் கிடந்தனர் முருகனும் செபாஸ்ட்டீனும்.

                                                                       05
                                                 கையிலொரு கடிதம்
முருகனின் தாய் முத்தம்மாள் வெகுநேரமாக மகனை தேடியும் காணாததால் கோட்டைக்குள் சென்றிருப்பானோ என எண்ணியபடி கோட்டைவாசலுக்கு வந்தார். கோட்டை வாயில் அகலத்திறந்து கிடந்தது. இரவு நேரம் என்பதால் ஆங்காங்கே தீப்பந்தங்கள் கொளுத்தப்பட்டு மிதமான போக்குவரத்துடன் காணப்பட்டது கோட்டைவாசல். காரணம் இன்றி உள்ளே செல்லமுடியாது என்பதால் வெளிவாயிலில் நின்ற ஒருகாவல் வீரனிடம் முருகன் உள்ளே சென்றானா என்று விசாரித்தாள்.
அவனுக்கு தமிழ் சரியாக புரியவில்லை போல.

அருகிலுள்ள வேறு பிரெஞ்சுக்காரனை அழைக்க அவனுடன் பேசிக்கொண்டிருந்த கோட்டை காவல் தளபதி பிராங்க்ளின் அருகில் வந்தான். முருகனை காணோம் என்று அவன் தாய் தேடிக்கொண்டிருப்பதும், காலையில் காரைக்காலில் இருந்து வந்த ஆயிரம் வீரர்களில் வெளியே சென்றவர்கள் எல்லோரும் வந்து விட செபாஸ்டியன் மட்டும் இன்னும் கோட்டைக்குள் வரவில்லை என்ற செய்தியும் ஏனோ பிராங்க்ளின் பொருத்தி பார்த்தான். அவன் பொருத்திபார்க்க சிற்சில காரணங்கள் இல்லாமலும் இல்லை.

இந்த பிராங்க்ளின் ஏற்கனவே முருகனிடம் சில சில்மிஷங்களை செய்திருக்கிறான் என ஏற்கனவே குறிப்பிட்ட நிலையில் இவனுக்கு செபாஸ்டியன் மீதும் ஒரு கண் விழுந்து விட்டது. செபாஸ்டினை எப்படி கைக்குள் போட்டுகட்டிலில் வீழ்த்தலாம் என்று இருந்தவனுக்கு முருகனையும் செபாஸ்டியனையும் சேர்த்து சந்தேகம் உண்டானதில் ஆச்சர்யம் இல்லை.

முருகன் இந்தபக்கம் வரவில்லை என அந்த அம்மாளுக்கு பதில் சொல்லி அனுப்பிவிட்டு தானே காற்றாட வெளியே வருவது போல கோட்டையை விட்டு வெளியேறினான் பிராங்க்ளின். அந்த அம்மாள் கடற்கரை பக்கம் போயிருப்பான் பொறுமையாக வருவான் என்று அலுத்துக்கொண்டு வீட்டுக்கு சென்று விட பிராங்க்ளின் கடற்கரை பக்கம் நடக்க துவங்கினான். நிலவொளியே போதுமான அளவு இருப்பதால் தீப்பந்தம் கொண்டுவருவது வீண் சந்தேகத்தை பலருக்கு உண்டாக்கும் என்று தன் சந்தேகத்திற்கு நியாயம் கற்பிக்கும் பொருட்டு கடற்மணலில் கால்புதைய நடந்தான் அவன். அடிக்கடி நடந்து செல்லும் கடற்பரப்பு ஆதலால் இருட்டில் கண்களை துழாவி நடந்தான் பிராங்க்ளின்.

கலவி வேகத்தில் கட்டிபிடித்து கிடந்த முருகனும் செபாஸ்ட்டினும் தன்னிலை மறந்து வியர்வைக் குளியல் நடத்தி கொண்டிருந்த பொழுது கடல் காற்றின் ஓசையை மீறி ஒரு ஆளரவம் கேட்கவே கட்டிபிடித்தபடி எட்டி பார்த்தனர் இருவரும். பிரெஞ்சு வீரன் ஒருவன் வருவது போல அரூபம் தெரிந்தது.

சுதாரித்து எழுந்த இருவரும் நிற்பது தகாது என்ற உணர்வுடன் புறப்படும் பொழுது

செம்பு! வறது பாத்தா எதோ உங்க ஆளுங்க போல இருக்கு நீ இந்த நேரத்துல கண்ணுல பட்டா தேவ இல்லாம சந்தேகம் உண்டாகும் நான் இப்படியே போறேன்.. நீ இந்த புன்னை கட்டுல புகுந்தீனா கொஞ்ச தூரத்துல ஒரு பாழும் மண்டபம் வரும் அத தாண்டி தெக்கால போனீன்னா கோட்டைக்கு போயிடலாம் போ போ என செபாஸ்டியனை துரித படுத்தினான் முருகன்.

அவன் சொன்ன வழி ஒன்றும் புரியவில்லை என்றாலும் குத்து மதிப்பாக புன்னைக்காட்டில் புகுந்து ஓடினான் செபாஸ்டியன். அவன் போகும் திசையை இருட்டில் வாஞ்சையோடு பார்த்துவிட்டு பிராங்க்ளின் வரும் திசையை நோக்கி நடந்தான் முருகன். இருவர் தரையில் கிடந்து எழுந்தது போலவும், ஒருவன் காட்டுக்குள் புகுந்து ஓடுவது போலவும் மங்கலான தோற்றம் தெரிந்ததையடுத்த பிராங்க்ளின் மிகுந்த பரபரப்புடன் வேகமாக நடக்கவும் எதிரே வந்த முருகன் நெருங்கினான்.

எங்க போய்ட்டு வர?

என்ன தொர சும்மா வெளிக்கு போய்ட்டு வரேன்

என்னது வெளிக்கா? அந்த காட்டுக்குள்ள ஒர்த்தர் ஓடுனா மாதிரி தெரிஞ்சிது அது யாரு?

என்னது ஓடுனா மாதிரியா? என்ன தொர சொல்லுற எனக்கு பயமா இருக்கு!! ஏற்கனவே இங்க மாயக்கா நடமாடுதுன்னு சொல்லுவாங்க நாந்தான் தைரியமா வருவேன்.

மாயக்கவா அது யாரு?

மாமாயினுஒரு அக்கா பொன்னகாட்டுக்கு பின்னால இருக்குற பாழும் மண்டபத்துல புருஷன் செத்துட்டருன்னு ஓடங்கட்ட ஏறுணுது, அது தன் புருஷன் ஆவியோட சேந்து இங்க நடமாடுதுன்னு சொல்லுவாங்க நான் நம்ப மாட்டேன் உன் கண்ணுல அகபட்டுருக்கு போல என்று பீதி கட்டினான் முருகன்.
முதலில் இதனை நம்பமறுத்த பிராங்க்ளின் முருகன் தொடர்ந்து செய்த ஒரு செயலில் ஆடிபோனான்.

என்ன பொய் சொல்லுறியா யாருன்னு சொல்லு அது? அங்க ரெண்டுபேரும் என்ன செஞ்சிங்க?

என்ன தொர இதைக்கூட நம்ப மாட்டுற மாயக்கா வந்தா மல்லிகப்பூ வாசம் அடிக்கும்னு சொல்லுவாங்க!! என்றபடி தன் கட்டுகுடுமியை அவிழ்த்தான். மாலையில் வீட்டு வாசலில் மலர்ந்திருந்த மல்லிகை மலர்களை ஒரு பிடிபறித்து கொண்டைக்குள் வைத்து முடிந்திருந்தான் முருகன். குடுமியை அவிழ்த்த உடன் அந்த மலர்கள் காற்றில் மனம் பரப்பி தரையில் விழுந்ததை கவனிக்காத பிராங்க்ளின் மல்லிகை வசனைக்கும் மாயக்காவுக்கும் பயந்தபடி

ஆமா எதோ பூ வாசம் அடிக்கிற மாதிரி இருக்கு என்றான்
ஓ!! பூவாசமும் அடிச்சுடுச்சா எனக்கு ஒன்னும் தெரில அந்நிய ஆளுன்னு உன்னதான் மாயக்கா தொடர்து போல வா தொர ஓடிடலாம் என்ற முருகன் ஓட்டமெடுக்க முருகனோடு சேர்ந்து ஓட்டம் பிடித்த பிராங்க்ளின் கோட்டைவாசலில் வந்து நின்றான்.

சிரிப்பை கட்டுபடுத்த முடியாத முருகன் ஒரு வழியாக வீடு வந்து சேர்ந்த பொழுது. உணவருந்த கைகால்களை கழுவ கொல்லைக்கு சென்றான். நிமிர்ந்த பொழுது கோட்டை மதிலில் நிற்கும் பிரெஞ்சு வீரர்கள் தெரிந்தார்கள். மனம் ஏனோ செபாஸ்டியனை நினைத்தது. அவனது வேகம் கொடுத்த தாகமும் ஆண்மை கொடுத்த மயக்கமும் ஏனோ மீண்டும் அவனை பார்க்க தூண்டியது. மெல்ல மெல்ல காதல் அவனை ஆட்கொள்ள துவங்கியிருந்ததை அறியாமல் தூங்கி போனான் அவன்.

புன்னைகட்டுக்குள் புகுந்து சென்ற செபாஸ்டியன் பொத்தாம் பொதுவாக ஓடியதில் எங்கிருந்து பார்த்தாலும் தெரியும் உயரமான கோட்டைமதிலை இலக்காக வைத்து ஓடி கோட்டை வாயிலை அடைந்து உள்ளே சென்ற அதே நேரம் பிராங்க்ளின் கோட்டை வாயிலை அடைந்து செபாஸ்டியன் வந்து விட்டதை அறிந்து உள்ளே சென்றான். சிறிது தொலைவிலேயே செபாஸ்டின் போய்கொண்டிருக்க. அதிகாரத் தோரணையில் அழைத்தான் அவனை. செபாஸ்டின் திரும்பி பார்த்து ஓடி வந்து சல்யூட் வைத்தான்.

பிரெஞ்சு மொழியில் இருவரும் பேசிக்கொண்ட சாராம்சம் என்னவென்றால் செபாஸ்டியன் ஊரை சுற்றிபார்க்கத்தான் வெளியே சென்றான் என்றும் கடற்கரை பக்கம் போகவில்லை என்றும் கூறினான். அதனை அரைகுறையாக நம்பிய பிராங்க்ளின் திரும்பி சென்ற செபாஸ்டியன் சட்டையை பார்த்தான் அது வியர்வையில் நனைந்திருந்ததோடு கொஞ்சம் கடல்மணல் ஒட்டிகொண்டிருந்தது ஒட்டியிருந்த மணல்துகளை எண்ணி மறந்தே போனான் கடிதத்தை.

-   தொடரும்